இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்காக 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு சர்வதேச மெய்வல்லுனர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி,...
விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள பொன்விழா தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நேற்று (06) நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தலவாக்கலையைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
5 ஆயிரம் மீற்றர் மற்றும் 1500 மீற்றர் உள்ளிட்ட நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் தேசிய சம்பியனாக வலம் வருகின்ற வக்ஷன், தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். முன்னதாக, அவர் 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்குகொண்டதன் காரணமாக அவருக்கு தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்குபெற முடியாமல் போனது. எவ்வாறாயினும், தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமையை தேடிக் கொடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இம்முறை தேசிய விளையாட்டு விழா நகர்வல ஓட்டப் போட்டியானது இன்று (06) நுவரெலியா கோல்வ் புற்தரையில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் தலைமையில் நடைபெற்றதுடன், நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் சேர்ந்த 122 வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
50ஆவது தேசிய விளையாட்டு விழா ஜுன் 6ஆம் திகதி முதல் ஆரம்பம்
தேசிய நகர்வல ஓட்டத்தில் நூலிழையில்...