ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான நேற்று (27) இலங்கை ஒரு வெள்ளிப் பதக்கம் உட்பட 3 பதக்கங்களை வென்று அசத்தியது.
இந்த 3 பதக்கங்களும் அஞ்சலோட்டப் போட்டிகளில் கிடைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×400 அஞ்சலோட்டப் போட்டிகள் இரண்டிலும்...