இலங்கை தடகள வரலாற்றில் சாதனை படைத்த ஈட்டி எறிதல் விளையாட்டு வீரரான ரமேஷ் தரங்க பத்திரகேயின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக உஸ்வத்த பிஸ்கட் தனியார் நிறுவனம் இணைந்து கொண்டுள்ளது. இது தொடர்பான விசேட பாராட்டு மற்றும் கெளரவிப்பு விழா, ரமேஷ் தரங்கவின் பிறப்பிடமான கென்னாத்துடாவிலுள்ள வின்ரோ வரவேற்பு மண்டபத்தில் கடந்த ஜூன் 22 ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
இலங்கை தடகளத் துறையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்ற அவரது வரலாற்றுச் சாதனைகளைக் கெளரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், விளையாட்டுத் துறை பொறுப்பதிகாரிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டு ரமேஷின் சர்வதேச வெற்றிகளைப் பாராட்டினர்.
விளையாட்டு அரங்கில் ரமேஷ் தரங்க நிகழ்த்திய அசாதாரண சாதனைகள் இலங்கை தடகள வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன. அவர் 2026 ஆம் ஆண்டு ஈட்டி எறிதல் போட்டியில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனையைப் பதிவு செய்தார். இதன் மூலம் உலக தரவரிசையிலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றதுடன், ஒலிம்பிக் தகுதிக்கான தனது வாய்ப்பையும் வலுப்படுத்தியுள்ளார்.
மீண்டும் டயமண்ட் லீக் அரங்கில் முத்திரை பதித்தார் ருமேஷ் தரங்க
இலங்கை சாதனையை முறியடித்து உலக மெய்வல்லுனர்...
விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள பொன்விழா தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நேற்று (06) நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தலவாக்கலையைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
5 ஆயிரம் மீற்றர் மற்றும் 1500 மீற்றர் உள்ளிட்ட நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் தேசிய சம்பியனாக வலம் வருகின்ற வக்ஷன், தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். முன்னதாக, அவர் 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்குகொண்டதன் காரணமாக அவருக்கு தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்குபெற முடியாமல் போனது. எவ்வாறாயினும், தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமையை தேடிக் கொடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இம்முறை தேசிய விளையாட்டு விழா நகர்வல ஓட்டப் போட்டியானது இன்று (06) நுவரெலியா கோல்வ் புற்தரையில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் தலைமையில் நடைபெற்றதுடன், நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் சேர்ந்த 122 வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
50ஆவது தேசிய விளையாட்டு விழா ஜுன் 6ஆம் திகதி முதல் ஆரம்பம்
தேசிய நகர்வல ஓட்டத்தில் நூலிழையில்...