“எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர” – மாலிங்க பெருமிதம்!

4557

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவுள்ள லசித் மாலிங்க, தான் ஒரு விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளராக மாறுவதற்கு முக்கிய காரணம் நுவன் குலசேகர என டுவிட்டர் காணொளியின் மூலமாக தெரிவித்துள்ளார். 

மாலிங்கவின் கோரிக்கையினால் பிரியாவிடை போட்டியை கோரிய குலசேகர

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் ………..

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நுவன் குலசேகர நேற்றைய தினம் (24) அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருந்தார். இலங்கை கிரிக்கெட் சபையிடம் தனக்கு ஒரு பிரியாவிடை வழங்கும் போட்டியை கோரியிருந்த போதும், நேற்றைய தினம் திடீரென அவர் ஓய்வை அறிவித்தார்.

எற்கனவே, லசித் மாலிங்க நுவன் குலசேகர தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கையில், நுவன் குலசேகரவுடன் இணைந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்திருந்தார். எனினும், பங்களாதேஷ் தொடருக்கான குழாத்தில் குலசேகர இணைக்கப்படவில்லை. இந்தநிலையில், குலசேகரவுடன் விளையாடிய காலம் மற்றும் தனது பந்துவீச்சில் நுவன் குலசேகரவின் பங்களிப்பு என்பவை தொடர்பில் மாலிங்க காணொளி மூலம் கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.

குலசேகர ஓய்வுபெற்றமை தொடர்பில் கருத்து வெளியிட்ட லசித் மாலிங்க,

“நானும், குலசகேரவும் 14 வருடங்கள் ஒன்றிணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளோம். அவர் இன்று (நேற்று) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை நான் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளராக மாறுவதற்கு 90 சதவீதமான காரணம் குலசேகரதான். அவர் முதல் 5 ஓவர்களை சிறப்பாக வீசி துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தம் வழங்கியதாலேயே நான் விக்கெட்டுகளை கைப்பற்றினேன். அதற்காக குலசேகரவுக்கு எனது நன்றிகள்”

ஓய்வை அறிவித்த மாலிங்கவின் அதிரடி கருத்து

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ………..

அதேநேரம், இலங்கை அணியானது 2014ம் ஆண்டு T20I உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தமை இலங்கை அணியின் பந்துவீச்சு. குறிப்பாக, கடைசி ஓவர்களில் மாலிங்க மற்றும் குலசேகர ஆகியோர் பந்துவீசிய விதம் எதிரணியான இந்தியாவை குறைந்த ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. இதுதொடர்பிலும் மாலிங்க தனது ஞாபகங்களை பகிர்ந்துக்கொண்டார்.

“T20I உலகக் கிண்ணத்தில் கடைசி ஓவர்களை எவ்வாறு பந்துவீசவேண்டும் என்ற திட்டத்தை நாம் இருவரும் (குலசேகர மற்றும் மாலிங்க)  வகுத்திருந்தோம். அதேபோன்று இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிலும் நாம் எப்படி பந்துவீசினோம். இதுபோன்ற எமது கிரிக்கெட் வாழ்க்கையில் ஞாபகப்படுத்த வேண்டிய பல விடயங்கள் உள்ளன”

இதேவேளை, மாலிங்க தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை நாளைய தினத்துடன் நிறைவுக்கு கொண்டுவரவுள்ள நிலையில், குலசேகரவை நாளைய தினம் ஆர்.பிரேமதாஸ மைதானத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதுமாத்திரமின்றி 12 வருடகாலம் இலங்கை கிரிக்கெட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய குசலேகரவுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் அவர் ஒரு பயிற்றுவிப்பாளராக வரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<