தேசிய நகர்வல ஓட்டத்தில் மலையக வீரர் வக்ஷன் தங்கம் வென்று சாதனை

National Cross-country Championships 2026

8

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள பொன்விழா தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நேற்று (06) நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தலவாக்கலையைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 

ஆயிரம் மீற்றர் மற்றும் 1500 மீற்றர் உள்ளிட்ட நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் தேசிய சம்பியனாக வலம் வருகின்ற வக்ஷன்தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்முன்னதாகஅவர் 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது 

இதனிடையேகடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்குகொண்டதன் காரணமாக அவருக்கு தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்குபெற முடியாமல் போனதுஎவ்வாறாயினும்தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமையை தேடிக் கொடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது 

இம்முறை தேசிய விளையாட்டு விழா நகர்வல ஓட்டப் போட்டியானது இன்று (06) நுவரெலியா கோல்வ் புற்தரையில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் தலைமையில் நடைபெற்றதுடன்நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் சேர்ந்த 122 வீரவீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். 

மழையுடனான காலநிலைக்கு மத்தியில் 10 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதுடன்மத்திய மாகாணம் சார்பில் பங்குகொண்ட விக்னராஜ் வக்ஷன்அப் போட்டியை 33 நிமிடங்கள், 28.81 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பிடித்தார் 

இப்போட்டியில் புசல்லாவையைச் சேர்ந்த ஜேகுகேந்திர ப்ரஷான் (33.48.01 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும்பண்டாரவளையைச் சேர்ந்த மகிந்தன் கோபிநாதன் (34.00.41 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டனர்இந்த இரண்டு வீரர்களும் தேசிய நகர்வலத்தில் முதல் தடவையாக பதக்கம் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

அத்துடன்இப் போட்டியில் பங்குபற்றிய நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் மற்றுமொரு முன்னணி வீரரான மலையகத்தைச் சேர்ந்த கேசண்முகேஸ்வரன் நான்காவது இடத்தைப் பிடித்தார். 

பெண்கள் பிரிவில் மெத்மி ரசாரா விஜேசூரிய (கிழக்கு மாகாணம் 38:05.96 செக்.) தங்கப் பதக்கத்தையும்சமுதிகா ஹேரத் (மத்திய மாகாணம் 38:35.78 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் எச்.எம்.டபிள்யூ.ஜீ.டபிள்யூ.எம்ஹேரத் (மத்திய மாகாணம் 39:48.67 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 

இந்த நிலையில்ஆண்கள் பிரிவில் ஊவா மாகாணம் ஒட்டுமொத்த சம்பியனானதுடன்பெண்கள் பிரிவில் மத்திய மாகாணம் ஒட்டுமொத்த சம்பியனாக தெரிவாகியது. 

இந்த இரண்டு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு முறையே 50,000 ரூபாய், 40,000 ரூபாய்30,000 ரூபாய் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன. 

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார். 

>>மேலும்பலமெய்வல்லுனர்  செய்திகளைப்படிக்க<<