மழை காரணமாக கைவிடப்பட்ட இலங்கை, பங்களாதேஷ் A அணிகளுக்கிடையிலான போட்டி

85

சுற்றுலா பங்களாதேஷ் A கிரிக்கெட் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இன்று (23) நடைபெறவிருந்த நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது. 

உத்தியோகபூர்வமற்ற இருதரப்பு தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் A அணி, இலங்கை A அணியுடன் நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. 

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி இன்று கட்டுநாயக்கவில் உள்ள எம்.சி.ஜி மைதானத்தில் ஆரம்பமாக இருந்தது. 

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை A அணியில் அசேல குணரத்ன

சுற்றுலா பங்களாதேஷ் அணியுடன் மோதவுள்ள இலங்கை A அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் குழாம் இலங்கை கிரிக்கெட் சபையினால்….

எனினும், இன்றைய நாள் முழுவதும் தொடர்ந்து பெய்ந்த மழையினால் போட்டியின் முதல் நாளினை நடாத்துவதற்கான சூழல் இருக்கவில்லை.  இதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. 

இதன்படி, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை (24) தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<