இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை 7 வருடங்களாக குறைப்பு

2000
SRISANTH picture
©Getty

சூதாட்ட சர்ச்சையில் சிக்கி வாழ்நாள் தடைக்குள்ளாகிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை 7 வருடங்களாக குறைக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கேரள வேகப் பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்த், 2005ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளிலும், 53 ஒருநாள் போட்டிகளிலும் 10 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்

ரஷீட் கான் தலைமையில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது ………

கடந்த 2011இல் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வென்றபோது அந்த அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். அத்துடன், .பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய போது ஸ்ரீசாந்த் மீது 2013ஆம் ஆண்டு சூதாட்டப் புகார் எழுந்தது

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில், அவர் வீசிய 2ஆவது ஓவரில் 14 ஓட்டங்கள் விட்டுக்கொடுப்பதற்கு அவருக்கு 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரை அடுத்து அவர் மீது பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்தது

அவருடன் சேர்த்து சக வீரர்கள் அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்களையும் டெல்லி பொலிஸார் கைது செய்தனர். ஆனால், தான் ஒரு அப்பாவி என்று ஸ்ரீசாந்த் தொடர்ந்து மறுத்து வந்தார்.

எனினும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் பினையில் வெளியே வந்து வழக்கை நடத்தி, குற்றமற்றவர் என்று நிரூபித்தார். ஆனால், பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார்.

இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியில் டில்ருவான் பெரேரா

இலங்கை அணியின் அனுபவ சுழல் பந்துவீச்சு ………

இதை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஸ்ரீசாந்துக்கு விதித்த ஆயுட்கால தடையை இரத்து செய்தது. சூதாட்ட விவகாரத்தில் அதற்குரிய தண்டனையை 3 மாதங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் சபையின் நன்னடத்தை அதிகாரிக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

வெறும் 10 இலட்சத்துக்காக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது மிகுந்த மனவேதனையை தந்ததாகவும், அந்த காலம் தமது வாழ்நாளின் இருண்ட காலம் என்றும் கூறினார். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளக்கூட முயன்றதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் சபையின் நன்னடத்தை அதிகாரி டி.கே. ஜெயின் ஸ்ரீசாந்த் விவகாரத்தில் தீர்ப்பளித்துள்ளார். அதில் ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் சபை மற்றும் அது சார்ந்த கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க 7 வருடங்கள் தடை விதிக்கிறோம்

இந்த தடை முன் திகதியிட்டு அதாவது 13-9-2013ஆம் ஆண்டில் இருந்து அமுலுக்கு வருகிறது. இதன்படி அவரது தடைக்காலம் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடையும். அதன் பிறகு எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடலாம் என்று கூறியுள்ளார்.

எனவே, ஸ்ரீசாந்தின் போட்டித்தடை 7 வருடங்களாக குறைக்கப்பட்டாலும் அவருக்கு தற்போது வயது 36. தடை முடியும் போது 37 வயதாகிவிடும். எனவே தடை முடிந்தாலும் அவர் மீண்டும் கிரிக்கெட்டில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவு. ஆனால், இந்த தடை விலக்கல் அவருக்கு பரிய ஆறுதலாக இருக்கும் என்று கூறலாம்.

எனினும், போட்டித் தடைக்குள்ளாகிய காலப்பகுதியில் ஸ்ரீசாந்த் எந்தவொரு கிரிக்கெட்டும் விளையாடவில்லை. ஆனாலும், திரைப்படமொன்றில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் விளையாடியவரான ஸ்ரீசாந்த் இந்த தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்காக பிரார்த்தனை செய்த எனது நலம்விரும்பிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது எனக்கு 36 வயது ஆகிறது. அடுத்த வருடம் தடை முடியும் போது 37 வயதாகும். நான் 27 டெஸ்டில் விளையாடி 87 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறேன்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையை 100 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். என்னால் இந்த டெஸ்ட் அணிக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் ஆசைப்பட்டது உண்டு என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<