கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில்...
வட மாகாண பாடசாலைகளினுடைய 109ஆவது பொன் அணிகள் சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி அணிகள் இடையிலான கிரிக்கெட் பெரும் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இரு அணிகளது ஆதிக்கத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.
முதல் நாளில் ஆதிக்கம் பெற்றுள்ள யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி
யாழ்ப்பாண கல்லூரியின் சொந்த மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வரும் போது யாழ்ப்பாண கல்லூரியினை (176) அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்திருந்த புனித பத்திரிசியார் கல்லூரி அணியானது முதல் நாள் ஆட்டநிறைவில் 40 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி காணப்பட்டிருந்தது.
பத்திரிசியார் கல்லூரி அணிக்கு நம்பிக்கை வழங்கியிருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சிவநாதன் செஹான் 13 ஓட்டங்களுடனும், ஹரின் அட்ரியன் 24 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.
இன்று (13) போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 136 ஓட்டங்கள் பின்தங்கியவாறு முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி அணிக்கு, முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 89 ஓட்டங்களை பகிர்ந்த சிவநாதன் செஹான் வாசுதேவன் 45 ஓட்டங்களுடன் விஷ்னுகோபனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து சென்றார்.
அதன் பின்னர் குறுகிய இடைவெளியில் மற்றைய ஆரம்ப வீரரான ஹரின் அட்ரியனும் 42 ஓட்டங்களுடன் வாசுதேவன் விஷ்னுகோபனின் சுழலுக்கு இரையாகினார்.
இதனையடுத்து குறுகிய இடைவெளிகளில் மத்திய வரிசை வி5க்கெட்டுக்களை இழந்த யாழ். பத்திரிசியார் அணிக்கு பின்வரிசை வீரராக வந்து நம்பிக்கை வழங்கியிருந்த ஜெயரூபன் தினுலக்சன் அரைச்சதம் பெற்றுக் கொடுக்க யாழ். பத்திரிசியார் கல்லூரி அணியானது முதல் இன்னிங்ஸில் 58.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டது.
92 ஆவது புனிதர்களின் சமர் மார்ச் 19...