சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியானது இன்னிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவு செய்துள்ளது.
சாதனை இணைப்பாட்டத்துடன் முதல் டெஸ்டில் பலம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள்
அன்டிகுவாவில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (27) நிறைவடையும் போது மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை அடுத்து 318 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணியானது 15 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது.
நேற்று களத்தில் நின்ற நிஷான் மதுஷ்க 02 ஓட்டங்களுடனும், Night Watchman வீரராக வந்த கசுன் ராஜித 04 ஓட்டங்களுடனும் காணப்பட்டனர்.
இலங்கை அணிக்கு இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இன்னும் 303 ஓட்டங்கள் தேவைப்பட இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை நான்காம் நாளில் தொடர்ந்தது. தொடக்கத்தில் இருந்தே போட்டியில் துடுப்பாட தடுமாறிய இலங்கை வீரர்கள் மிகவும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஓய்வறை நடந்தனர்.
இறுதியில் 31.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை வீரர்கள் வெறும் 101 ஓட்டங்கள் பெற்று போட்டியில் படுதோல்வி அடைந்தனர்.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தினேஷ் சந்திமால் அதிகமாக 43 ஓட்டங்கள் எடுக்க, அடுத்த இரு இலக்க ஓட்டங்களை பெற்ற வீரராக சொனால் தினுஷ (12) மாறினார்.
மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சில் கெமர் ரோச் 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஜய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அத்துடன் ஷாமர் ஜோசேப் 2 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகன் விருதை இப்போட்டியில் அபார இரட்டைச் சதம் விளாசிய அமீர் ஜங்கூ பெற்றார். இப்போட்டியின் வெற்றியோடு மேற்கிந்திய தீவுகள் இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்க, தமது இறுதி 8 டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியினையும் பதிவு செய்துள்ளது.
போட்டியின் சுருக்கம்
$contents = file_get_contents("https://stats.thepapare.com/cricket/embed/match_result/west-indies-vs-sri-lanka-sri-lanka-tour-of-west-indies-1st-test"); echo...
ஷாக்கீரே பாரிஸின் அதிரடி சதத்தின் உதவியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில், இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி இலகுவான வெற்றியைப் பதிவு செய்து தொடரை 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
கொழும்பு என்.சி.சி மைதானத்தில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 349 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமைந்த இந்த ஆடுகளத்தில், இலங்கை பந்துவீச்சாளர்களால் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்டக் குவிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இப்போட்டியின் நாயகனாக உருவெடுத்த 22 வயதான வலதுகை துடுப்பாட்ட வீரரான ஷாக்கீரே பாரிஸ் 139 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கலாக 177 ஓட்டங்களை விளாசி அசத்தினார். இவருக்கு பக்கபலமாகத் திகழ்ந்த கெவ்லோன் ஆண்டர்சன் 78 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 86 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்காக வெறும் 155 பந்துகளில் 222 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்து, அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தது.
350 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இலங்கை வளர்ந்து வரும் அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. 2ஆவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சினெத் ஜயவர்தன, வேகப்பந்து வீச்சாளர் அமாரி குட்ரிட்ஜின் பந்துவீச்சில் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, சிறந்த ஃபார்மில் இருந்த அணியின் தலைவர் நிபுன் தனஞ்சய 2 பவுண்டரிகளுடன் 8 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜெடியா பிளேட்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் முதல் 3 ஓவர்களுக்குள்ளேயே 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி பெரும் நெருக்கடிக்குள்ளானது.
சினெத்தின் அதிரடி சதத்தால் இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு வெற்றி
இதன்பின் ஜோடி சேர்ந்த விஷேன் ஹலம்பகே மற்றும் தினுர களுபஹன ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டுக்காக 63 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்க முயன்றனர். அதிரடியாக விளையாடிய ஹலம்பகே 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 42 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது 14ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய களுபஹன 61 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 54 ஓட்டங்களைப் பெற்றார். பின்னர், இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் காப்பாளர் ரமேஷ் சில்வாவுடன் இணைந்து மேலும் 62 ஓட்டங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ரமேஷ் சில்வா 64 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 69 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் அவர் சாமிக்க ஹீனடிகலவுடன் (32 ஓட்டங்கள்) இணைந்து 5ஆவது விக்கெட்டுக்காக 51 ஓட்டங்களைச் சேர்த்தார்.
இலங்கை வீரர்களின் இந்த போராட்டத்திற்கு மத்தியிலும், அவர்களால் இலக்கை நோக்கி அச்சுறுத்தல் விடுக்க முடியவில்லை. கடைசி 10 ஓவர்களில் கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில், வெற்றிக்கு 101 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது. இறுதிநேரத்தில் ட்ரவீன் மெத்யூ 21 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 29 ஓட்டங்களைப் பெற்றுப் போராடினார். எனினும், மறுமுனையில் அவருக்கு போதிய ஆதரவு கிடைக்காததால் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 42.4 ஓவர்களில் 273 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட்ட அமாரி குட்ரிட்ஜ் 7 ஓவர்களில் 56 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜிஷான் மொதாரா மற்றும் ஜியோவோண்டே டெபெய்ஸா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்படி, ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற 4 நாட்கள் கொண்ட போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி 1-0 என இழந்திருந்த போதிலும், கொழும்பில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2-1 எனத் தொடரைக் கைப்பற்றி இந்த சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
The Lanka Premier League (LPL) 2026, Sri Lanka's premier domestic T20 tournament with an international flavor, has selected the following Match Official Panel for the sixth edition of the tournament.
The panel features ICC Elite Panel Match Referee Ranjan Madugalle, ICC Elite Panel Umpire Kumar Dharmasena, several other ICC match referees and umpires,...