சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான T20I தொடரின் மூன்றாவது இறுதியுமான போட்டியில், இலங்கை மகளிர் அணியானது டக்வத் லூயிஸ் முறையில் 03 ஓட்டங்களால் பதிவு செய்துள்ளது.
T20I தொடரினையும் கைப்பற்றிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
இந்த வெற்றியுடன் இலங்கை மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்களாதேஷையும் 3-0 என வைட்வொஷ் செய்துள்ளது.
பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரினை ஏற்கனவே இலங்கை வீராங்கனைகள் 2-0 எனக் கைப்பற்றியிருக்க, மூன்றாவது போட்டி இன்று (02) சில்லேட் அரங்கில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் மகளிர் அணியினர் முதலில் இலங்கை வீராங்கனைகளை துடுப்பாடப் பணித்தனர். மழையின் காரணமாக அணிக்கு 09 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணியானது 6 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்கள் பெற்றது.
இலங்கை மகளிர் துடுப்பாட்டம் சார்பில் அணித்தலைவி சமரி அத்தபத்து 27 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
பங்களாதேஷ் மகளிர் அணியின் பந்துவீச்சில் சுல்டானா காட்டுன் 08 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.
தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 88 ஓட்டங்களை அடைய பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணியானது 9 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களுடன் போட்டியில் போராடித் தோல்வியினைத் தழுவியது.
பங்களாதேஷ் துடுப்பாட்டம் சார்பில் ஷோபனா மொஸ்தரி 21 ஓட்டங்களை அதிபட்சமாக பெற்றதோடு இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் சுகந்திகா குமாரி மற்றும் சமரி அத்தபத்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்ட நாயகியாகவும், தொடர் நாயகியாகவும் இலங்கை மகளிர் அணிக்காக சகலதுறைகளில் பிரகாசித்திருந்த சாமரி அத்தபத்து தெரிவாகியிருந்தார்.
ஸ்கோர் விபரம்
$contents = file_get_contents("https://stats.thepapare.com/cricket/embed/match_result/sri-lanka-vs-bangladesh-bangladesh-tour-of-sri-lanka-3rd-t20"); echo $contents;
>>மேலும் கிரிக்கெட்...