இலங்கை கிரிக்கெட் சபையின் பூரண நிதி பங்களிப்புடன் தேசிய கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மொனரவில பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானம் நேற்று (30) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன் மூலம் சப்ரகமுவ மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கு இது மிகவும் தேவையான வசதிகளை வழங்குகிறது.
இரத்தினபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் மூலம் இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட சப்ரகமுவ மாகாண கிரிக்கெட் சங்கங்களில் உள்ள வீரர்களுக்கு தமது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். அதேபோல, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் வாய்ப்பு ஏற்படும்.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த...
சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்கப் போகும் வீரர்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐசிசி 19 வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 19ஆம் திகதி முதல் பெப்ரவரி 11ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ளது.
இத்தொடர் முதலில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் சபை ஐசிசி...