இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள T20 தொடரிலிருந்து இலங்கை அணியின் தலைவரும், முன்னணி வீரருமான குசல் மெண்டிஸ் மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் உபாதை காரணமாக விலகியுள்ளனர்.
>>சமரியின் சாதனை பந்துவீச்சினால் இலங்கைக்கு மகளிருக்கு 2ஆவது வெற்றி<<
லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 தொடரின் போது குசல் மெண்டிஸ் தொடை உபாதைக்கு முகம் கொடுத்திருந்தார். அதேநேரப் பினுர பெர்னாண்டோவு முதுகு உபாதைக்கு ஆளாகியிருந்தார். தற்போது இருவரும் உபாதை சிகிச்சைகளைப் பெற்று வரும் போது முழுமையாக குணமடையவில்லை. இதன் காரணமாக இங்கிலாந்து அணியுடனான T20 தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இல்லாத நிலையில் T20 குழாமில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, காயம் அடைந்த குசல் மெண்டிஸுக்குப் பதிலாக பவன் ரத்நாயக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், பினுர பெர்னாண்டோவுக்குப் பதிலாக டில்ஷான் மதுஷங்கவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
>>இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி; ஒருநாள் மற்றும் T20 குழாம்கள் வெளியீடு<<
குசல் மெண்டிஸின் விலகலைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான இந்த T20 தொடரில் இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















