IPL வீரர்கள் ஏலத்துக்கான திகதி அறிவிப்பு!

Indian Premier League 2022

208

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23ஆம் திகதி நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL மெகா ஏலம் கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் அணிகள் வீரர்களை தக்கவைத்துக்கொண்டு, தேவையற்ற வீரர்களை வெளியேற்றி புதிய வீரர்களை இணைத்துக்கொள்ள முடியும்.

>> T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் வனிந்து முதலிடம்

இம்முறை வீரர்கள் ஏலமானது கொச்சியில் நடைபெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதுடன், வீரர்களுக்கான மொத்த ஏலத்தொகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, கடந்த ஏலத்தில் மொத்தமாக ஒரு அணிக்கு 90 கோடிகள் (இந்திய ரூபாய்) வீரர்கள் ஏலத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை ஏலத்தில் 5 கோடிகள் அதிகரிக்கப்பட்டு ஒரு அணிக்கு 95 கோடி ரூபாய் ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் ஏலம் டிசம்பர் 23ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வீரர்கள் தக்கவைப்பு விபரங்களை இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அணிகள் சமர்ப்பிக்கவேண்டும் என இந்திய கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<