சஞ்சு சம்சனுக்கு மீண்டும் அபராதம்

Indian Premier League – 2021

185
IPL

டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசாததால் சஞ்சு சம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற பஞ்சாப் அணியுடனான போட்டியிலும் இதே தவறுக்காக ராஜஸ்தான் அணித்தலைவர் சஞ்சு சம்சனுக்கு அபாரதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சம்சனுக்கு அபராதம்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் 36ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஓப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது.

இந்த நிலையில், இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், அணியின் தலைவர் சஞ்சு சம்சனுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதாக IPL நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், அணியில் விளையாடிய வீரர்களுக்கு தலா 6 இலட்சம் ரூபா அல்லது தனிநபர் போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா அணித்தலைவர் மோர்கனுக்கு 24 இலட்சம் அபராதம்

இந்த பருவகாலத்தில் ஏற்கனவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் சஞ்சு சம்சனுக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனவே இது இரண்டாவது முறை, இந்த சீசனில் மீண்டுமொரு முறை ராஜஸ்தான் அணி இதே தவறை செய்தால், அந்த அணியின் தலைவர் சஞ்சு சம்சனுக்கு 36 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படும்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…