ஒரே போட்டியில் இரண்டு தேசிய சாதனைகளை முறியடித்த ஆஷிகா

426

பெண்களுக்கான பளுதூக்கலில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆஷிகா விஜயபாஸ்கர் தேசிய பளுதூக்கல் தகுதிகாண் போட்டியில் பங்குபற்றி தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பளுதூக்கல் குழாத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கான பளுதூக்கல் தகுதிகாண் போட்டி (Weightlifting Control Competition) அண்மையில் பொலன்னறுவையில் உள்ள கல்லேல்லவில் நடைபெற்றது.

இதில் யாழ்ப்பாணம் பளுதூக்கல் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான 71 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்குகொண்ட ஷிகா, ஸ்னெச் முறையில் 77 கிலோ கிராம் எடையை ஒரே தடவையில் தூக்கி ஸ்னெச் முறைக்கான புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.

SAG பளுதூக்கலில் யாழ். மங்கை ஆர்ஷிக்காவுக்கு வெள்ளிப் பதக்கம்

முன்னதாக 2019இல் தெற்காசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தகுதிகாண் போட்டியில் இதே எடைப் பிரிவில் 76 கிலோ கிராம் எடையைத் தூக்கி ஸ்னெச் பிரிவில் ஷிகா தேசிய சாதனை நிலைநாட்டியிருந்தார்.

இதனிடையே, குறித்த போட்டியில் க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 95 கிலோ கிராம் எடையைத் தூக்கிய ஷிகா, ஒட்டுமொத்தமாக 172 கிலோ கிராம் எடையைத் தூக்கி புதிய சாதனை படைத்தார். இதற்குமுன் 171 கிலோ கிராம் எடையே சாதனையாக இருந்தது

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக  எந்தவொரு போட்டிகளும் நடைபெறவில்லை.அத்துடன், தொடர்ச்சியான பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு பெரும்பாலான வீரர்களுக்கு கிடைக்கவில்லை.

பளுதூக்கல் பயிற்சிப் போட்டியில் பதினாறு இலங்கை சாதனைகள் முறியடிப்பு

எனவே, ஷிகாவும் குறித்த போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் பயிற்சிகளை மேற்கொண்டு தனது சொந்த சாதனையை மீண்டும் முறியடித்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்

தனது சொந்த சாதனையை இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் புதுப்பிக்க கிடைத்தமை பெரு மகிழ்ச்சியைத் தருவதாக ஷிகா குறிப்பிட்டார்.

இதனிடையே, ஆஷpகாவின் பயிற்சியாளரகச் செயற்பட்டு வருகின்ற அவருடைய தந்தை விஜயபாஸ்கர் கருத்து தெரிவிக்கையில்,

பெண்களுக்கான பளுதூக்கல் போட்டிகளில் பல்வேறு எடைப் பிரிவுககளில் அண்மைக்காலமாக பல தேசிய சாதனைகளை நிலைநாட்டி வருகின்ற ஷிகா, இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பளுதூக்கல் சிறப்புக் குழுவுக்கு தெரிவாகாமல் இருப்பது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது

சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறும் மெய்வல்லுனர்களுக்கு மில்லியன் தொகை பரிசு

முன்னதாக நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் ஷிகாவிடம் தோற்றவர்களுக்கு தேசிய குழாத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளமை எல்லாவற்றுக்கும் மேலாக வியப்பைத் தருவதாக அவர் தெரிவித்தார்

19 வயதான ஆஷிகா, இறுதியாக நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதுஇவ்வாறிருக்க, குறித்த தகுதிகாண் போட்டியில் பெண்களுக்கான 45 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்குகொண்ட ஹபரனையைச் சேர்ந்த 22 வயதான ஸ்ரீமாலி சமரகோன் புதிய தேசிய படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க …