இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை உறுதி செய்ய முன், வீரர்களின் புதிய உடற்தகுதி அறிக்கைகளுக்காக இந்திய தேர்வாளர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>LPL அணிகளில் மாற்றம்; தம்புள்ள அணியில் இணையும் சிக்கண்டர் ரஷா!
கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் வொஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ரணா மற்றும் நிதீஷ் குமார் இலங்கை தொடரில் பங்கெடுப்பதில் சந்தேகம் நிலவுகின்றது.
இதில் ரணா மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோர் தெரிவாகுவது, மிகவும் சாத்தியம் குறைவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தொடை தசை உபாதைக்குள்ளாகிய 26 வயது நிரம்பிய வொஷிங்டன் சுந்தர் தொடர்பில் இறுதி முடிவு வெளியாகவில்லை.
வொஷிங்டன் சுந்தர் இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடாத போதும், உபாதை விடயங்களை கருத்திற் கொண்டு ஒகஸ்ட் 23ஆம் திகதி தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் அவர் நிபந்தனையுடன் சேர்க்கப்பட ஒரு வாய்ப்பு உள்ளது என நம்பப்படுகின்றது.
அத்துடன் பணிச்சுமை மற்றும் உபாதை ஆபத்து போன்றவற்றை கருதி ஜஸ்பிரிட் பும்ராவும் இலங்கை தொடரில் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய தேர்வாளர்கள் இலங்கை தொடரில் பங்கெடுக்கும் வீரர்கள் தொடர்பிலான அறிவிப்பை காலக்கிரமத்தில் வெளியிடுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















