இலங்கை 15 வயதுக்குட்பட்ட தேசிய கால்பந்து அணியில் (ஆண்கள்) வீரர்களை இணைத்துக்கொள்வதற்கான திறந்த நேர்முகத்தேர்வு எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது
அதன்படி 2011 மற்றும் 2012ஆம் ஆண்டு பிறந்த வீரர்கள் பெத்தகான பயிற்சி மையத்திற்கு வருகைத்தந்து தங்களுடைய திறமைகளை நிரூபிப்பதன் மூலம் இலங்கை 15 வயதுக்குட்பட்டோர் அணியில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும்.
>>கொழும்பு எப்.சியை வீழ்த்தி எட்டாவது வெற்றியை பெற்ற அப்கண்ட்ரி லயன்ஸ்<<
காலை 07.00 மணிமுதல் 08.00 மணிவரை வீரர்கள் தங்களை பதிவுசெய்துக்கொள்ள முடியும் என்பதுடன், காலை 08.00 மணிமுதல் பி.ப. 02.00 மணிவரை வீரர்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும்.
இந்த நேர்முகத்தேர்வில் அண்மையில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான நேர்முகத்தேர்வை தவறவிட்ட வீரர்களும் வருகைத்தர முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த இந்த நேர்முகத்தேர்வில் தெரிவுசெய்யப்படும் வீரர்கள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை கட்டாயமாக வைத்திருக்கவேண்டும் என இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<






















