ICC T20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
பங்களாதேஷ் அணியை T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து ஐசிசி நீக்கியதை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பங்களாதேஷிற்கு தங்களுடைய ஆதரவை வெளியிட்டிருந்தது.
அதுமாத்திரமின்றி இந்திய அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்த நிலையில், ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தன.
>>அயர்லாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை<<
அத்துடன் நேற்று (09) பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஐசிசி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பாகிஸ்தான் அணியானது இந்தியாவுக்கு எதிராக விளையாட சம்மதம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக பாகிஸ்தான் அணி போட்டியை புறக்கணித்தால், ஏனைய கிரிக்கெட் சபைகளுடைய வருமானம் பாதிக்கப்படும் என, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபைகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் இதுதொடர்பில் மேற்குறித்த இரு கிரிக்கெட் சபைகளும் கலந்துரையாடியதுடன், போட்டியை புறக்கணிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியிருந்தது.
அதேநேரம் நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் இந்த விடயம் தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கலந்துரையாடியதாகவும், இந்த கலந்துரையாடல்களை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தங்களுடைய போட்டியை புறக்கணிக்கும் முடிவிலிருந்து பின்வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறும என ஐசிசி அறிவித்துள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<





















