இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார IPL தொடரின் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பணிப்பாளராக செயற்பட்டுவந்த இவர், குறிப்பிட்ட பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதுடன், அணியின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்படவுள்ளார்
>>ஒருநாள் தொடரில் இலங்கையை வைட்வொஷ் செய்த பாகிஸ்தான்<<
ராஹுல் டிராவிட் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக 2025ஆம் ஆண்டு செயற்படுவதற்கு முன்னர் குமார் சங்கக்கார 2021-2024ஆம் ஆண்டுரை ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.
இவருடைய பதவிக்காலப்பகுதியில் ராஜஸ்தான் அணி 2022ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்ததுடன், 2024ஆம் ஆண்டு பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது.
குமார் சங்கக்கார தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளதுடன், விக்ரம் ராதோர் தலைமை உதவி பயிற்றுவிப்பாளராகவும், ஷேன் போண்ட் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் செயற்படவுள்ளனர்.
அத்துடன் ட்ரெவர் பென்னி உதவி பயிற்றுவிப்பாளராகவும், சித் லஹிரி பிரகாசிப்பு திறனுக்கான பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















