டயலொக் அனுசரணையில் நடைபெறவுள்ள 90வது புனிதர்களின் சமர்!

61

நாளைய விளையாட்டு நட்சத்திரங்களை உருவாக்குவதில் தன் அயராத அர்ப்பணிப்பை காட்டி வரும் இலங்கையின் முன்னணி இணைய வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மதிப்புமிக்க இரு கத்தோலிக்க கல்லூரிகளான சென். ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கிடையிலான 90வது புனிதர்களின் சமருக்கு இம்முறையும் பிரதான அனுசரணை வழங்குகிறது.  

அருட்தந்தை மொரிஸ் ஜே. லி கொக் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியானது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இம்மாதம் 22ம் மற்றும் 23ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 

>> இலங்கை ஒருநாள் அணியில் மீண்ட பெதும் நிஸ்ஸங்க, லஹிரு குமார

பிரதான அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா, போட்டிகளை நேரலையாக கண்டுகளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன்படி Dialog Television ThePapare TV HD (அலைவரிசை எண் 126), Thepapare.com மற்றும் Dialog ViU App ஊடாக போட்டிகளை நேரலையாக கண்டுகளிக்க முடியும். 

இரண்டு பாடசாலைகளுக்கும் இடையிலானபுனிதர்களின் சமர்அதன் போட்டித் தன்மைக்கு மிகவும் புகழ்பெற்றது. போட்டியின் முதல் இன்னிங்ஸ்  60 ஓவர்களுக்கு  மட்டுப்படுத்தப்பட்டு  நடைபெறுவதால்இரண்டு  நாட்கள்  கொண்ட இப்போட்டியானது முடிவை எட்டும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. அதற்கமைய இம்முறை போட்டிகளில் புனித ஜோசப் கல்லூரி அணிக்கு லஹிரு அமரசேகர தலைமை தாங்குவதுடன், புனித பேதுரு கல்லூரி அணிக்கு 19 வயதிற்குட்பட்ட இலங்கை அணி வீரர் விஷான் ஹலம்பகே தலைமை தாங்குகின்றார். 

தொன்னூறாவது முறையாக நடத்தப்படும் புனிதர்களின் சமர் பன்னெடுங்காலமாக தொடரும் பாரம்பரியத்தின் மேன்மையை போற்றுகிறதுஎன தொடரை ஒழுங்கமைக்கும் கொழும்பு புனித பேதுரு கல்லூரியின் அதிபர் அருட்தந்தை ரோஹித ரொட்ரிகோ தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்நீண்ட காலமாக எம்முடன் கைகோர்த்து ஆதரவளிக்கும் டயலொக் ஆசிஆட்டாவிற்கு நான் எனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்எனவும் குறிப்பிட்டார். 

கொழும்பு சென். ஜோசப் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை ரஞ்சித் அந்தராடி தெரிவிக்கையில்,’புனிதர்களின் சமர் என அழைக்கப்படும் இலங்கையின் இரு முன்னணி கத்தோலிக்க கல்லூரிகளான புனித பேதுரு மற்றும் சென். ஜோசப் கல்லூரிகளுக்கிடையிலான இப்போட்டி மிக நீண்டதும் செழுமையானதுமான வரலாற்றை கொண்டது. இவர்களின் ஆட்டம் இரு கல்லூரிகளினதும் இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்களிடத்தில் உற்சாகத்தை கொண்டுவரும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். இரு பாடசாலைகளும் அவற்றின் அணித்தலைவர்களும் இரண்டு நாட்களும் எமக்கு சுவாரஸ்யமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன்என்றார். 

>> T20 உலகக் கிண்ணத்தில் ஆஸி. அணியின் தலைவராக மிச்சல் மார்ஷ்??

இதேவேளைஇவ்வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து ஆதரிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இது எதிர்காலத்தில் நம் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடவிருக்கும் சாதனையாளர்களை உருவாக்குவதற்கு உதவுகிறதுஎன டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தேவப்பெரும அவர்கள் தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில்அனைத்து அணிகளுக்கும் வீரர்களுக்கும் உற்சாகமயமான கிரிக்கெட் பருவத்துக்கான எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்றார். 

புனிதர்களின் சமர் போட்டிகளில் சென். ஜோசப் கல்லூரி தொடரில் 12 வெற்றிகளுடன் முன்னணியில் உள்ளது, அவர்களின் கடைசி வெற்றியானது 2008 இல் ருவந்த பெர்னாண்டோபுள்ளே தலைமையில் கிடைத்திருந்தது, அதேவேளை புனித பேதுரு கல்லூரி வினு மொஹொட்டியின் தலைமையில் 2016 போட்டியில் கடைசி வெற்றியை பெற்றிருந்தது. இது அவர்களின் 10 ஆவது மொத்த வெற்றியாக அமைந்தது. வைக்கப்பட்டுள்ளது. இதுவரை  ஆறுபத்தேழு  போட்டிகள்  சமநிலையில்  முடிவடைந்துள்ளமை  வரலாற்று  சிறப்புமிக்கஅஇப்போட்டியின் வீரியத்திற்கு ஒரு சான்று. 

இதுவரை நடைபெற்றுள்ள 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் புனித ஜோசப் கல்லூரி 25-21 என கணக்கில் முன்னிலையில் உள்ள அதேவேளை 2 போட்டிகள் முடிவு ஏதுமின்றியும் 1 போட்டி சம நிலையிலும் முடிந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் புனித பேதுரு அணியினர் புனித ஜோசப்ஸ் அணியினருக்கு கடுமையான போட்டியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேற்படி இரண்டு கல்லூரிகளும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு பல வீரர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளமை சிறப்பம்சமாகும். அதன்படி திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மெத்திவ்ஸ், சமிந்த வாஸ், துனித் வெல்லாலகே, ஷவோன் டேனியல், திசர பெரேரா, அஷ்லி டி சில்வா, மைக்கல் வென்டோர்ட், ரொஷேன் சில்வா, பிரியமல் பெரேரா மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சென். ஜோசப் கல்லூரி வீரர்கள் ஆவர். மேலும், ரோய் டயஸ், ருமேஷ் ரத்நாயக்க, வினோதன் ஜோன், அமல் சில்வா, ரசல் ஆர்னோல்ட், கௌஷல் லொக்குஆராச்சி, மலிந்த வர்ணபுர, ஏஞ்சலோ பெரேரா. ஜனித் லியனகே மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் புனித பேதுரு கல்லூரி வீரர்கள். 

>> பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை ஒருநாள் குழாம் அறிவிப்பு

டயலொக் ஆசிஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதுடன், இலங்கை பகிரங்க கொல்ஃபிற்கு பிரதான அனுசரணையாளராக திகழ்வதுடன், பராலிம்பிக் விளையாட்டுகளில் தேசிய பரா விளையாட்டுகளுக்கும் உலக பரா விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கும் அனுசரணை அளிக்கிறது. இவற்றுடன் நாளைய வெற்றியாளர்களை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி ஆகியவற்றிற்கு தொடர்ந்து அனுசரணை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<