16 பேராக குறைக்கப்பட்ட இலங்கை வலைப்பந்து அணி

171

தேசிய வலைப்பந்து சம்மேளனம் (NFSL) வலைப்பந்து உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் பொருட்டு இலங்கை வலைப்பந்து குழாத்தினை 16 பேராக மட்டுப்படுத்தியிருக்கின்றது.

அவுஸ்திரேலியாவில் மீண்டும் களமிறங்கும் தர்ஜினி சிவலிங்கம்!

இந்த ஆண்டுக்கான வலைப்பந்து உலகக் கிண்ணம் ஜூலை 28 முதல் ஒகஸ்ட் 6ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் இடம்பெறுகின்றது. இந்த உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை வீராங்கனைகளை மேலும் தயார்படுத்தும் நோக்கிலேயே, வீராங்கனைகளின் எண்ணிக்கை 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

திலகா ஜினதாசவின் தலைமையில் பயிற்சிகளைப் பெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட இந்த வலைப்பந்து அணியானது எதிர்வரும் மே மாதம் அளவில் 12 பேர் கொண்ட குழாமாக மேலும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 20 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்ட இந்த அணியில் தற்போது மட்டுப்படுத்தல் இடம்பெற்றிருக்கும் நிலையில், அணியில் இருந்து வெளியேறிய வீராங்கனைகளாக ஹன்சிமா திசாநாயக்க, பராமி கொடித்துவக்கு, துலான்ஜலி சுராவீர மற்றும் இஷானி மதுசிக்கா ஆகியோர் காணப்படுகின்றனர்.

இதேநேரம், தற்போதைய அணித் தெரிவு இலங்கை வலைப்பந்து அணியின் முன்னாள் தலைவி தமயந்தி ஜயத்திலக்க, திசாங்கனி கொடித்துவக்கு மற்றும் சாமிக்க ஜயசேகர ஆகியோர் மூலம் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய இலங்கை வலைப்பந்து குழாம்

திசால அலகம, செமினி அல்விஸ், சானிக பெரேரா, இமாஷா பெரேரா, கயான்ஜலி அமரவன்ச, ரஷ்மி திவ்யாஞ்சலி, ருக்சலா ஹப்புவராச்சி, சாமுதி விக்ரமரட்ன, துலங்கி வன்னித்திலக்க, மல்மி ஹெட்டியராச்சி, தருஷி நவோத்யா பெரேரா, கயானி திஸாநாயக்க, சத்துரங்கி ஜயசூரிய, காயத்ரி கெளசல்யா, தர்ஜினி சிவலிங்கம், பாஷினி யோசித டி சில்வா

>>மேலும் விளையாட்டு செய்திகளுக்கு<<