This year has been somewhat of an eventful year for the Karate fraternity in the island as the sport has been recognized by the International Olympics Committee as a competition to be featured in the Olympics Games.
T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஆகியவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள் (Tickets) அனைத்தினதும் விற்பனை நிறைவடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.
இரட்டை வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தில் முன்னேறும் இலங்கை வீரர்கள்
எனவே மேற்கூறிய இந்தப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் நுழைவுச்சீட்டு விற்பனை நிலையங்களுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்று (15) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கின்றது. ஒருகொடவத்தையில் (எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில்) அமைந்துள்ள இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிலையம் நுழைவுச்சீட்டுக்கள் நிறைவடைந்ததன் காரணமாக இன்று மூடப்பட்டிருக்கும்.
அதேநேரம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை 16ஆம் திகதி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும். இப்போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்களும் நிறைவடைந்துள்ளமையால் இந்தப் போட்டிக்காக கண்டி பலகொல்ல அபிதா மைதானத்தில் அமைந்துள்ள நுழைவுச்சீட்டு விற்பனை நிலையமும் மூடப்பட்டிருக்கும்.
விடயங்கள் இவ்வாறு காணப்படுவதனால் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற விரும்புபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டப்படுகின்றார்கள்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<