ரிட்ஸ்பறியின் ‘தேசத்துக்கு ஒரு வெற்றிவீரர்’ வேலைத்திட்டம் ஆரம்பம்

73

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழா உட்பட இன்னும் பல சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கின்ற வீர வீராங்கனைகளின் திறமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ரிட்ஸ்பறியின் தேசத்துக்கு ஒரு வெற்றிவீரர் (மௌபிமட்ட வீரயெக்) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 32 மெய்வல்லுனர்களுக்கு அனுசரணை வழங்கப்பட்டது. 

CBL புட்ஸ் இன்டர்நெஷனல் லிமிட்டெட்டினால் தயாரிக்கப்படும் முதல்தர சொக்கலெட்டான ரிட்ஸ்பறி, கடந்த ஒன்றரை தசாப்தங்களாக இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுட்பட ஸ்குவாஷ், நீச்சல், றக்பி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுக்களுக்கும் தொடர்ச்சியாக அனுசரணை வழங்கி வருகின்றது

சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறும் மெய்வல்லுனர்களுக்கு மில்லியன் தொகை பரிசு

இந்நிலையில் ஆசிய விளையாட்டு விழா, பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆகியவற்றில் இலங்கைக்கு பதக்கங்ளை வென்றுகொடுக்கக்கூடியவர்கள் என தேசிய மெய்வல்லுநர் தெரிவுக்குழுவினால் இனங்காணப்பட்டு 2019 முதல் தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற 18 வீர வீராங்கனைகளுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சம் ரூபா அனுசரணையை ரிட்ஸ்பறி நிறுவனம் வழங்கவுள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவெனில், தேசிய ரீதியில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற 18 வீரர்களினதும் பயிற்சியாளர்களாக கடமையாற்றி வருகின்ற 10 பேருக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அத்துடன் இலங்கை மெய்வல்லுநர் பயிற்றுனர்கள் சங்கத்தின் முன்மொழிவுக்கு அமைய எதிர்கால நட்சத்திரங்களாக விளங்குகின்ற 14 பாடசாலை வீர வீராங்கனைகளுக்கு மாதந்தோறும் ஐயாயிரம் ரூபா வீதம் வழங்கி வருகின்ற 60 ஆயிரம் ரூபா அனுசரணைத் தொகையை இந்த வருடம் முதல் 32 வீரர்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதுஇவ்வாறிருக்க, ரிட்ஸ்பறியின் தேசத்துக்கு ஒரு வெற்றிவீரர் திட்டத்தின் கீழ் நன்மை பெறவுள்ள வீரர்களுக்கு அனுசரணை வழங்கும் வைபவம் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் பேசிய CBL புட்ஸ் இன்டர்நெஷனல் லிமிட்டெட்டின் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) நிலுபுல் டி சில்வா, நாட்டில் முதல்தர சொக்கலெட் என்ற வகையில் இலங்கையின் முதல்தர மெய்வல்லுனர்களுக்கு நாங்கள் அனுசரணை வழங்குகின்றோம்.   

பல்வேறு நெருக்கடிகள் காரணமாக எமது விளையாட்டு வீரர்களுக்கு ஒலிம்பிக் பதக்க கனவை கைவிட நேரிடுகின்றது. வீரர்கள் எவ்வித தடைகளையும் எதிர்கொள்ளாமல் ஒலிம்பிக் பதக்க கனவை நனவாக்கும் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்என தெரிவித்தார்.

அமெரிக்காவில் வைத்து இலங்கை சாதனை படைத்த உஷான்

இதேவேளை, குறித்த வைபவத்தில் சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ரஸித் விக்ரமசிங்ஹ, பிரதான நிறைவேற்று அதிகாரி சமித பெரேரா, இலங்கை மெய்வல்லுனர் சங்க தெரிவுக் குழு தலைவர் விமலசேன பெரேரா, அதன் உறுப்பினர்களான இனேகா குரே, மெய்வல்லுனர் சங்கத்தின் செயலாளர் ப்ரேமா பின்னவல மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் உபாலி அமரதுங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

மாதாந்தம் 25,000 ரூபா நிதி உதவிபெறும் வீரர்கள் 

சுமேத ரணசிங்க, வினோஜ் சஞ்சய டி சில்வா, அருண தர்ஷன, ஹிமாஷ ஷான், அமில ஜயசிறி, குப்புன் குஷான்த, ரொஷான் தம்மிக்க, செனிரு அமரசிங்க, நிமாலி லியனஆராச்சி, ஷெலிண்டா ஜென்சென், நடீஷா ராமநாயக்க, இனேக்கா குறே, டில்ஷி குமாரசிங்க, அமாஷா டி சில்வா, லக்கா சுகந்தி, நிலானி ரட்நாயக்க, இந்துனில் ஹேரத், சுரேஷான் தனஞ்சய, விதூஷா லக்ஷானி 

மாதாந்தம் 5,000 ரூபா நிதி உதவிபெறும் வீரர்கள் 

காவிந்தி சஞ்சனா, அமேஷா ஹெட்டிஆராச்சி, ஷா பல்லேகம, நவிஷ் சந்தேஷ், ஷ்மி காவிந்தியா, சதீப்பா ஹெண்டர்சன், காவிந்தி தத்சரணி, ஷானிக்கா லக்ஷானி, ஜனிந்து லக்விஜய, டபிள்யூ. கே. பியசிறி, ஹர்ஷா கருணாரட்ன, சதினி காவீஷா டிலான் போகொட 

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<