இந்திய அணிக்கு பயிற்சியளிக்கத் தயார்: அசாருதீன்

169

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வருவதற்கு எந்நேரமும் தயாராக இருக்கிறேன் என அந்த அணியின் முன்னாள் தலைவரான மொஹமட் அசாருதீன் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணம் வரை உள்ளது.  

இவர் 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவிக்கு வந்த பிறகு 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, ரவி சாஸ்திரி பதவிக் காலம் இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அசாருதீன் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வர விரும்புவதாக முதல்தடவையாகத் தெரிவித்துள்ளார்.

பிராட்மேனுக்கு பிறகு கோஹ்லி தான் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் – சங்கக்கார

தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியில் மொஹமட் அசாருதீன் செயற்பட்டு வருகிறார்

இந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வருவது குறித்து மொஹமட் அசாருதீன் கருத்து தெரிவிக்கையில்

நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறேன். அந்த வாய்ப்பு கிடைத்தால் இப்போதுகூட பயிற்சியாளராக வருவதற்கு நான் தயார்

தற்போது இந்திய அணியில் அதிகமான பயிற்சியாளர்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு இரண்டிலும் நான் சிறப்பு தகுதி பெற்று உள்ளதால், என்னை அணியில் எடுத்தால் மேலும் ஒரு துடுப்பாட்டப் பயிற்சியாளர் தேவையில்லை என நினைக்கிறேன் என தெரிவித்தார்.

இதேவேளை,  இந்த வருடம் நடைபெறவுள்ள .பி.எல் தொடர் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்

.பி.எல் தொடர் நடக்காததால் பல இளம் வீரர்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். பிசிசிஐ .பி.எல் தொடரை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒவ்வொரு மைதானத்திலும் குறைந்தபட்சம் ஏழு போட்டிகளாவது நடைபெறும் என எனது கணிப்பு இருக்கிறது. .பி.எல் தொடர் நடைபெற்றால் மக்கள் மனதில் இருக்கும் கொரோனா குறித்த பாதிப்பு சற்று குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<