இலங்கையின் பாடசாலை கூடைப்பந்திற்கு வலுவூட்டும் மக்கள் வங்கி

3
Sri Lanka Schools Basketball Tournaments 2026

இளம் திறமைகளை வளர்க்கவும், கூடைப்பந்தாட்டத்தில் அதிகளவிலான மாணவர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும், இலங்கை விளையாட்டின் எதிர்காலத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் மக்கள் வங்கி 2026ஆம் ஆண்டிற்கான இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்து தொடரின் பிரதான அனுசரணையாளராக மாறியிருக்கின்றது.

>>WATCH – மானவ் சுதரின் அபார பந்துவீச்சின் உதவியுடன் வெற்றியீட்டியது இந்தியா| SLvIND

இதற்கான உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள பீப்பள்ஸ் டவர் (People’s Tower) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது மக்கள் வங்கிக்கும் இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்து சம்மேளனத்திற்கும் (SLSBA) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்பட்டது.

பாடசாலை கூடைப்பந்து தொடரில் 13 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 20 வயதுக்குட்பட்டோர் ஆகிய பிரிவுகளுக்கான போட்டிகள் இடம்பெறவிருக்கின்றது.

அத்துடன் மக்கள் வங்கி அனுசரணையில் பாடசாலை மாணவர்களிடையே கூடைப்பந்தாட்டத்தை மேலும் பிரபலப்படுத்தவும், ஒழுக்கம், குழுப்பணி, தலைமைத்துவம், விடாமுயற்சி போன்ற நற்பண்புகளை வளர்க்கவும் விசேட தொடர்பாடல் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவிருக்கின்றது.

நாடு முழுவதிலிமிருந்து 120 இற்கும் மேற்பட்ட தேசிய, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 80 ஆடவர் அணிகள் மற்றும் 50 மகளிர் அணிகளுடன், ஏறத்தாழ 1,950 மாணவ விளையாட்டு வீர, வீராங்கனைள் இந்த கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இந்த நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ஆர். காரியவசம், மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிளைவ் பொன்சேக்கா, இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்து சம்மேளன தலைவர் இரான் சம்பிக்க சில்வா, வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், முன்னாள் தேசிய வீரர்கள் மற்றும் பாடசாலை விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<