டி20 தொடரை வைட் வொஷ் செய்தது பாகிஸ்தான் அணி

233

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்  அணி 33 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3-0 என டி20 தொடரை வைட் வொஷ் செய்து முதல்தர டி20 அணி என மீண்டும் நிரூபித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே பாகிஸ்தான் அணி 2-0 என தொடரை கைப்பற்றிய நிலையில் நேற்று (28) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.  இத்தொடரில் மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

நேற்று (26) ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் கடைசி ……

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி பாபர் அசாம் மற்றும்  சிப்ஷாடா பர்ஹான் ஆகியோரின் சிறப்பான ஆரம்பத்தின் மூலம் பாரிய ஓட்ட இலக்கை எதிர்பார்திருந்த போதும் அவ்வணியால் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக முதல் இரு போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் பெற்ற பாபர் அசாம் இப்போட்டியிலும் அதிக பட்சமாக 50 ஓட்டங்களை பெற்றிருந்தார். இது அவரின் கடைசி 5 டி20 இன்னிங்ஸ்களில் பெறப்பட்ட 4ஆவது அரைச்சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அது தவிர சிப்ஷாடா பர்ஹான் 39 ஓட்டங்களையும் மொஹமட் ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் மிட்செல் மார்ஷ் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

வைட் வொஷ்ஷை தவிர்க்கும் நோக்கில் இந்தப் போட்டியில் துடுப்பாட்ட வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்திய அவுஸ்திரேலிய அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ஆரோன் பின்ஞ்சுடன் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி களமிறங்கினார். எதிர்பார்த்த மாற்றத்திற்கு ஏற்றாற்போல் கேரி, முதல் இரு போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசி ஆட்ட நாயகன் விருது பெற்ற பாகிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சாளர் இமாத் வஷீம் வீசிய முதலாவது ஓவரிலே இரண்டு சிக்சர்கள் மற்றும் இரண்டு பௌண்டரிகளை விளாசி 20 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொடுத்தார்.  

எனினும், கேரியின் ஆட்டம் அதனை தாண்டி நீடிக்கவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் பின்ஞ் ஒரு ஓட்டத்துடனும் கேரி 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணியினால் வெற்றியிலக்கை அடைவது சாத்தியமற்று போனது.

இளம் வீரர் கமிந்து மெண்டிஸிற்கு அறிவுறை வழங்கிய திசர பெரேரா

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ …..

இறுதியில் அவ்வணி 117 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 33 ஓட்டங்களால் தோல்வியுற்று 3-0 என டி20 தொடரை இழந்தது. சிறப்பாக பந்து வீசிய சதாப் கான் மூன்று விக்கெட்டுகளையும் ஹஸன் அலி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.  

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக சதாப் கான் தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு டி20 தொடரின் நாயகனாக பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் அணி – 150/5 (20) – பாபர் அசாம் 50, சிப்ஷாடா பர்ஹான் 39, மொஹமட் ஹபீஸ் 32*, மிட்செல் மார்ஷ் 6/2

அவுஸ்திரேலிய அணி – 117  (19.1) – மெக்டேர்மொட் 21, மிட்செல் மார்ஷ் 21, சதாப் கான் 19/3, ஹஸன் அலி 14/2

முடிவு : பாகிஸ்தான் அணி 33 ஓட்டங்களால் வெற்றி.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<