விசேட மெய்வல்லுனர் தெரிவுப் போட்டிக்கான திகதி அறிவிப்பு

119

அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு விசேட மெய்வல்லுனர் தெரிவுப் போட்டித் தொடரொன்றை நடத்த இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17, 18 மற்றும் 19ஆம் ஆகிய திகதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இந்தப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளதுடன், இதில் சிறப்பாகச் செயற்படும் வீர வீராங்கனைகள் மேற்படி குறிப்பிட்ட போட்டித் தொடர்களுக்காக ஸ்தாபிக்கப்படும் தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

இந்தப் போட்டித் தொடர் இந்த ஆண்டின் கடைசித் தெரிவுப் போட்டியாகும். எனவே, அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள தெரிவுப் போட்டிக்கு தயாராகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மெய்வல்லுனர் சங்கம், இந்த போட்டித் தொடருக்கு வெளியே நடைபெறுகின்ற வேறு எந்த மெய்வல்லுனர் போட்டிகள் மூலமும் எந்தவொரு வீரருக்கும் தேசிய மெய்வல்லுனர் குழாத்தினுள் நுழைய வாய்ப்ப வழங்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளது.

விசேட மெய்வல்லுனர் தெரிவுப் போட்டிக்கான வீர வீராங்கனைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அடைவு மட்டங்கள் பின்வருமாறு;

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<