தென்னாபிரிக்க T20i அணியின் புதிய தலைவராகும் மர்க்ரம்

South Africa Cricket

139
Aiden Markram

தென்னாபிரிக்க T20i அணியின் புதிய தலைவராக துடுப்பாட்ட வீரர் எய்டன் மர்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைத்துவ கட்டமைப்பினை மாற்றுவதற்கான தீர்மானங்கள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

>> டெஸ்ட் கிரிக்கெட்டில் பெறப்பட்ட த்ரில் வெற்றிகள்

அந்தவகையில் கடந்த மாதம் T20i அணியின் தலைவர் பதவயிலிருந்து தெம்பா பௌவுமா விலகுவதாக அறிவித்திருந்தார். எனினும் சர்வதேச ஒருநாள் அணியின் தலைவராக தொடர்ந்தும் செயற்பட இவர் தீர்மானித்திருந்ததுடன், டெஸ்ட் அணியின் தலைவராகவும் டீன் எல்கருக்கு பதிலாக பின்னர் நியமிக்கப்பட்டிருந்தார்.

எய்டன் மர்க்ரம் தென்னாபிரிக்க 19 வயதின் கீழ் அணியின் தலைவராக செயற்பட்டிருந்ததுடன், 2014ம் ஆண்டு இவரின் தலைமையில் கிண்ணத்தையும் அணி வென்றிருந்தது. அதனைத்தவிர்த்து உள்ளூர் மற்றும் லீக் போட்டிகளுக்கான அணிகளின் தலைவராக இவர் செயற்பட்டிருந்தார். இறுதியாக SA T20 லீக்கில் சன்ரைஸர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் தலைவராக இவர் செயற்பட்டதுடன், அந்த அணி கிண்ணத்தையும் வென்றிருந்தது.

எய்டன் மர்க்ரம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20I தொடர் இவருடைய முதல் தொடராக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க T20i குழாம்

எய்டன் மர்க்ரம் (தலைவர்), குயிண்டன் டி கொக், பியோன் போர்சுன், ரீஷா ஹென்ரிக்ஸ், மார்கோ ஜென்சன், ஹென்ரிச் கிளாசன், சிசிந்த மகாலா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நோக்கியா, வெயன் பார்னல், காகிஸோ ரபாடா, ரெய்லி ரூஷோவ், டெப்ரைஷ் ஷம்ஷி, டிரிஷ்டன் ஸ்டப்ஸ்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<