இலங்கை தொடர்: மும்பையில் தனிமைப்படுத்தப்படும் இந்திய வீரர்கள்

India Tour Of Sri Lanka - 2021

122
BCCI

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் அனைவரும் நாளை (14) முதல் இரண்டு வாரங்களுக்கு மும்பையில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.  

இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 T20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

தவான் தலைமையில் இலங்கை வரும் இந்திய கிரிக்கெட் அணி

விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில், இலங்கை வரவுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.  

இதன்படி, மும்பைக்கு செல்லும் முன்பு PCR பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

அதேபோல, இந்திய அணியினர் தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கும் காலங்களில் அவர்களுக்கு மூன்று முறை PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதன்படி, இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தலை மேற்கொண்ட பிறகு ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஜூன் 28ஆம் திகதி இலங்கைக்கு புறப்படவுள்ளது

இலங்கையில் ஹோட்டலில் மேலும் மூன்று நாட்களுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதன்பிறகு PCR பரிசோதனை மேற்கொண்டுவிட்டு பயிற்சியைத் தொடங்குவார்கள்.

இதனிடையே, இலங்கை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து, ஒரு T20, இரண்டு ஒருநாள் போட்டிகள் என மூன்று பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளனர். இதில் ஷிகர் தவான் தலைமையிலான ஒரு அணியும், புவனேஸ்வர் குமார் வழிநடத்தும் மற்றொரு அணியும் மோதுகின்றன

ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை – இந்திய தொடர்

இந்தியாஇலங்கை அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர், ஜூலை 13ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூலை 18ஆம் திகதி நிறைவுபெறுகிறது

அதனைத்தொடர்ந்து T20 தொடர் ஜூலை 21ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூலை 25ஆம் திகதி நிறைவுபெறுகிறது. அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளன

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…