T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியுடன் இணையும் மஹேல

ICC T20 World Cup 2022

741

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடர் அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில் முதல் சுற்றில் விளையாடவுள்ள இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியம், நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

>> மஹேல ஜயவர்தனவிற்கு புதிய பதவி

இந்தநிலையில் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மஹேல ஜயவர்தன கடந்தவரும் நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்திலும் இலங்கை அணியின் ஆலோசகராக செயற்பட்டுவந்த நிலையில், மீண்டும் அந்த பதவிக்காக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இவர் இம்முறை நடைபெறும் ஐசிசி T20 உலகக்கிண்ணம் முழுவதும் இலங்கை அணியுடன் இணைந்திருந்து, போட்டிக்கான திட்டங்கள், நுணுக்கங்கள் மற்றும் வீரர்களுக்கு பங்களிப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹேல ஜயவர்தன இந்தியாவில் நடைபெற்றுவரும் IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக தொடர்ந்தும் செயற்பட்டுவரும் நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளினதும் கிரிக்கெட் ஆட்டதிறன் (Performance) சர்வதேச தலைமை அதிகாரியாக (Global Head) நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<