ஹார்திக் பாண்டியாவுக்கு 2025 ஐ.பி.எல் இல் போட்டித் தடை

194

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹார்திக் பாண்டியா அடுத்த பருவதற்கான ஐ.பி.எல் தொடரில் தனக்கான முதல் போட்டியில் ஆட தடை வழங்கப்பட்டிருக்கின்றது. 

2024 LPL வீரர்கள் ஏலம் குறித்த புதிய அறிவிப்பு

ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி இந்த பருவத்திற்காக விளையாடிய கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மந்த கதியில் ஓவர்களை வீசிய குற்றத்திற்காகவே (Slow over rate) அடுத்த ஆண்டுக்கான (அதாவது 2025 ஆம் ஆண்டுக்கான) .பி.எல் தொடரில் தான் ஆடவிருக்கும் முதல் போட்டியில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தினை இழக்கின்றார் 

மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்தப் பருவ காலத்தில் மூன்றாவது முறையாக மந்த கதியில் ஓவர்களை வீசியமை ஹர்திக் பாண்டியாவுக்கு தடை கிடைக்க முக்கிய காரணமாகும். 

அதேநேரம் மந்த கதையில் ஓவர்களை வீசிய குற்றத்திற்காக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு அவர்களது போட்டி ஊதியத்தில் இந்திய நாணயப்படி 12 இலட்சம் அல்லது ஊதியத்தின் 50% இணை (எது குறைவாக உள்ளதோ) அதனை அபராதமாகவும் செலுத்த நிர்ப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த .பி.எல் தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறியிருப்பதோடு ஐந்து தடவைகள் .பி.எல் சம்பியன் பட்டத்தை பெற்ற அவ்வணி இம்முறை ஹார்திக் பாண்டியாவின் தலைமையில் இம்முறை புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தினை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<