15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில், லயன் நகரில் நடைபெற்ற இரண்டாவது அரைஇறுதிப் போட்டியில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதின.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் பாதியில் பிரான்ஸ் அணி ஒரு கோல் அடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பிரான்ஸ் அணி வீரர் கிரீஸ்மேன் கோலாக மாற்றினார்.

இதனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது முதலே ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆட்டத்தில் 72ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி இரண்டாவது கோலை அடித்தது.

பிரான்ஸ் அணியின் கிரீஸ்மேனே இரண்டாது கோலை அடித்து அசத்தினார். இதனால் அந்த அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை அடைந்தது.

அதன் பிறகு ஜெர்மனி அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் ஏதும் கிட்டவில்லை. இறுதியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

முன்னதாக  லயன் நகரில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் போர்த்துக்கல்வேல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் போர்த்துக்கல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

இந்நிலையில், வரும் ஞாயிற்றுக் கிழமை இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ்போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்