IPL தொடரிலிருந்து வெளியேறும் டில்சான் மதுசங்க

350
Dilshan

உபாதைக்குள்ளான இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான டில்சான் மதுசங்க 2022ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 போட்டிகளிலிருந்து வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> RCB அணியின் பெயர், ஜெர்ஸி அதிரடி மாற்றம்

டில்சான் மதுசங்க இந்த ஆண்டுக்கான IPL போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் பங்களாதேஷ் அணியுடன் கடந்த வாரம் நடைபெற்றிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு தசை உபாதை ஏற்பட்டிருந்தது

குறிப்பிட்ட தசை உபாதையிலிருந்து டில்சான் மதுசங்க குணமடைய நீண்ட காலம் செல்லும் எனக் குறிப்பிடப்பட்டதிலிருந்தே அவர் தற்போது IPL போட்டிகளில் ஆட முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணி டில்சான் மதுசங்கவின் பிரதியீடாக தென்னாபிரிக்காவினைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் க்வேனா மப்பாக்கவிற்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது. க்வேனா மப்பாக்கா அண்மையில் நிறைவுக்கு வந்த இளையோர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<