ஆறு வருடங்களுக்கு பின்னர் கண்டியை வீழ்த்திய ஹெவ்லொக் அணி

122

முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் 14வது வாரத்துக்கான போட்டிகள் நேற்றுடன் (17) நிறைவுக்கு வந்துள்ளன. தொடரின் இரண்டாவது கட்டத்துக்கான இந்த வாரத்தின் முக்கிய போட்டியில் கண்டி விளையாட்டுக் கழகத்தை, ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம் வீழ்த்தியதுடன், CH&FC, CR&FC மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகங்கள் தங்களுடைய வெற்றிகளை பதிவுசெய்தன.

கண்டியை தொடர்ந்து ஹெவ்லொக் அணியையும் வீழ்த்திய CH&FC

முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி…

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் CR&FC  

ரத்மலானையில் கடந்த 16ம் திகதி நடைபெற்ற இந்தப் போட்டியில், CR&FC அணி, விமானப்படை அணியின் 12 புள்ளிகள் முன்னிலையை தகர்த்து வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் முதற்பாதியில் 19-07 என்ற புள்ளிகள் கணக்கில் சிறந்த முன்னிலையை பெற்றிருந்த விமானப்படை அணி, இரண்டாவது பாதியில் தடுமாறியது. எனினும், அபாரமாக ஆடிய CR&FC அணி இரண்டாவது பாதியில் 29 புள்ளிகளை குவிக்க, 36-26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.


CH&FC எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

கொழும்பு குதிரைப் பந்தய திடல் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இராணுவப்படை அணிக்கு எதிரான போட்டியில் 24-22 என 2 புள்ளிகள் வித்தியாசத்தில் CH&FC அணி த்ரில் வெற்றிபெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டியின் முதற்பாதியில் இராணுவப்படை அணி 17- 12 புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. எனினும், என்றும் போல் இரண்டாவது பாதியில் ஆதிக்கத்தை செலுத்திய CH&FC அணி மேலதிகமாக 14 புள்ளிகளை பெற்று, 24-22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.


கண்டி விளையாட்டுக் கழகம் எதிர் ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம்

கண்டி அணியை தங்களுடைய சொந்த மைதானத்தில் எதிர்கொண்ட ஹெவ்லொக் அணி, இரண்டாவது பாதியின் அபாரத்தால் 28-26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

கண்டியை வீழ்த்தி தொடர் வெற்றிகளை குவிக்கும் CH&FC

முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி…..

கண்டி அணியை சுமார் 6 வருடத்துக்கு பின்னர் வீழ்த்திய சாதனையை பதிவுசெய்துள்ள ஹெவ்லொக் அணி, முதற்பாதியில் 07-19 என்ற புள்ளிகள் கணக்கில் பின்னடைவை சந்தித்திருந்தது. எனினும், இரண்டாவது பாதியில் சிறப்பாக ஆடிய ஹெவ்லொக் அணி 28-26 என இரண்டு புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.  


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

வெலிசறை கடற்படை மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற போட்டியில் கடற்படை அணியை அவர்களுடைய சொந்த மைதானத்தில் வீழ்த்தி, பொலிஸ் அணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

போட்டியின் முதற்பாதியில் 15-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையை தக்கவைத்த பொலிஸ் அணி, இரண்டாவது பாதியில் மேலும் 11 புள்ளிகளை பெற்றதுடன், கடற்படை அணியை கட்டுப்படுத்தி 26-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<