இலங்கை – இந்திய அணிகள் இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம், இந்திய அணியின் முழுமையான ஆதிக்கத்தோடு நிறைவுக்கு வந்துள்ளது.
>>படிக்கல் மீண்டும் அபார சதம்; முதல் நாளில் வலுப்பெற்ற இந்தியா
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியின் இன்றைய (24) இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸை (300/8) தொடர்ந்த இந்திய அணிக்கு, தொடக்கத்தில் விக்கெட் ஒன்றை இழந்த போதும் பின்வரிசையில் வந்த துருவ் ஜூரெல், ரிசாப் பாண்ட் ஆகிய இருவரும் அபார இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கினர்.
இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடும் ஜூரேலின் சதத்தின் உதவியுடன் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 503 ஓட்டங்கள் பெற்றது.
துருவ் ஜூரெல் – ரிசப் பாண்ட் ஜோடி இந்திய அணியின் 7ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 112 ஓட்டங்கள் பெற்றது. அதில் தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் சதத்துடன் ஜுரேல் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 115 ஓட்டங்களுடன் இருந்தார். ரிசாப் பாண்ட் 63 ஓட்டங்கள் குவித்தார்.
மழையின் தாக்கம் காணப்பட்ட போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய மற்றும் கேசர நுவன்த ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றினர்.
இந்தியாவை அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை அணி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட போது மழை குறுக்கிட்டது.
>>பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி; போட்டி அட்டவணை வெளியானது!
பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் அடுத்த 16 பந்துகளுக்குள் இலங்கை அணி 2 முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. லஹிரு உதார ஒரு ஓட்டத்துடனும், பிரபாத் ஜயசூரிய 2 ஓட்டங்களுடனும் வெளியேறினர். தற்போது இந்தியாவினை விட இலங்கை 495 ஓட்டங்கள் பின்தங்கியிருக்க கமில் மிஷார 5 ஓட்டங்களுடன் களத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<






















