BPL போட்டிக்கு முன்பாக மயங்கி விழுந்த பயிற்சியாளர்  காலமானார்

120
BCB

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரின் அணிகளில் ஒன்றான டாக்கா கெபிடல்ஸ் பயிற்சியாளர் மெஹ்பூப் அலி ஷக்கி தீடிர் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>T20I தொடரினை இழந்த இலங்கை மகளிர் அணி<<

இன்று (27) ராஜாஷி வொரியர்ஸ் – டாக்கா கெபிடல்ஸ் அணிகள் இடையிலான BPL போட்டி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டி டாக்கா கெபிடல்ஸ் அணிக்கு தொடரில் முதல் போட்டியாக அமைந்த நிலையில், இந்தப் போட்டி தொடங்க சில நிமிடங்களுக்கு முன்பாக, டாக்கா கெபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் மெஹ்பூப் அலி ஷக்கி திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.

இந்த நிலையில் 59 வயதான அவருக்கு உடனடியாக மைதானத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அருகில் உள்ள அல் ஹரமைன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்ததாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான மெஹ்பூப் அலி ஷக்கி, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (BCB) பயிற்சியாளராக 2008ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

>>மகளிருக்கான தேசிய சுப்பர் லீக் T20 தொடர் ஜனவரியில் ஆரம்பம்<<

அதேநேரம் இந்த சம்பவம் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையும், வருத்தம் தெரிவித்திருப்பதோடு அவரின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளது.

மெஹ்பூப் அலி ஷக்கியின் மறைவு கிரிக்கெட் உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு அவரின் மரணத்திற்காக மரியாதை செலுத்தும் வகையில் வீரர்களும் அதிகாரிகளும், BPL டாக்கா கெபிடல்ஸ் – ராஜாஷி வோரியர்ஸ் இடையிலான போட்டியின் மத்தியில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியமை சுட்டிக்காட்டத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<