சங்கா மேலும் ஒருவருடம் விளையாட வேண்டும்: நவீன் திஸாநாயக்க

144

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் முன்னாள் அணித்தலைவருமான குமார்சங்ககார மேலும் ஒரு வருடத்திற்கு இலங்கை அணிக்காக விளையாட வேண்டும் எனஇலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்  மாநாட்டில் நவீன் திஸாநாயக்க இந்த கோரிக்கையைமுன்வைத்துள்ளார்.

இவர் மேலும் தெரிவிக்கையில் குமார் சங்ககார நமது நாட்டிற்காக இந்த தீர்மானத்தினைமேற்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண போட்டிகளுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்துகுமார் சங்ககார ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.