உபாதை காரணமாக மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள ஸ்மித்

544

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், முழங்கை உபாதைக்கு முகங்கொடுத்து உள்ளமையினால்,  அவர் சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கமில் மிஷாரவின் சதத்தோடு வலுப்பெற்ற இலங்கை இளையோர் அணி

இலங்கை இளையோர் மற்றும் அவுஸ்திரேலிய இளையோர் (19 வயதின்கீழ்)…

ஸ்டீவ் ஸ்மித் பங்களாதேஷ்  ப்ரீமியர் லீக் (BPL) தொடரில் கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். இதற்கிடையில், ஸ்மித்தின் வலது கை முழங்கை பகுதியில் உபாதை ஏற்பட்டதன் காரணமாக அவர் அவுஸ்திரேலியா சென்று, பரிசோதனைகளை மேற்கொண்டார். இந்த பரிசோதனைகளின் படி ஸ்மித்தின் முழங்கை தசைநார் பகுதியில் கடுமையான உபாதை ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், ஸ்மித்தின் உபாதையை குணமாக்குவதற்கு, அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த சத்திர சிகிச்சையின் பின்னர், அவர் ஆறு வாரங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த உபாதையானது, ஸ்டீவ் ஸ்மித் ஒருவருட தடைக்கு பின்னர், சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த வருடம் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது,  பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் ஸ்மித் மற்றும் வோர்னருக்கு ஒருவருட போட்டித் தடை விதிக்கப்பட்டதுடன், கெமரூன் பென்கிரொப்டிற்கு 9 மாத தடை வழங்கப்பட்டது.  இதில், பென்கிரொப்ட் தடை நீங்கி பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடி வருகின்றார்.

இதன்படி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரின் தடைக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவுக்கு வருகிறது. எனினும் ஸ்மித் உபாதை காரணமாக தடை நிறைவடைந்தவுடன் அணிக்குள் வருவதில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. அத்துடன், உபாதைக்கு முகங்கொடுத்துள்ள ஸ்மித், பாகிஸ்தான் அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர், பாகிஸ்தான் சுப்பர் லீக் மற்றும் மார்ச் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள .பி.எல். தொடர் என்பவற்றில் விளையாடுவதும் சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

1980களில் பயன்படுத்திய ஜேர்சிக்கு மாறிய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1980-களில் பயன்படுத்தியது போன்ற ஜேர்சியை…

ஸ்டீவ் ஸ்மித்தின் உபாதை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ஊடக பேச்சாளர்,

ஸ்டீவ் ஸ்மித்தின் முழங்கை தசைநார் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த செவ்வாய்கிழமை (15) அவருக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதன் பிறகு சுமார் 6 வாரங்கள் ஸ்மித் கை காப்பு பட்டியினை (Brace) அணிந்துக்கொள்ள வேண்டும். குறித்த கை காப்பு பட்டியை நீக்கியதன் பின்னரே ஸ்மித், சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவது குறித்து கருத்து வெளியிட முடியும்என்றார்.

இதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை எதிர்வரும் ஏப்ரல் 23ம் திகதிக்கு முன்னர் உலகக் கிண்ண குழாத்தை அறிவிக்கவுள்ளது. தற்போது உபாதைக்கு உள்ளாகிய ஸ்மித், குறித்த காலப்பகுதிக்குள் எந்தவொரு சர்வதேச போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால் உலகக்கிண்ண குழாத்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் நிலை என்னவென்பதை உறுதியாக கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<