டில்ஹார லொக்குஹெட்டிகே மீது ஐசிசி குற்றச்சாட்டு

143
Image Courtesy - ICC

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத் தொகுப்பை மீறியதாக இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகே மீது இன்று (04) குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மும்பை அணியின் வெற்றியுடன் நள்ளிவிரவில் நாடு திரும்பிய மாலிங்க

ஐ.பி.எல். தொடரில் நேற்று (03) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 37 ஓட்டங்கள்

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத் தொகுப்பை மீறியதாக கடந்த வருடம் நவம்பர் மாதம் டில்ஹார லொக்குஹெட்டிகேவின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அதே வகையான குற்றங்களை  ஐசிசி யும் சுமத்தியுள்ளது.

கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட் (ஐசிசி) வாரியத்தின் சார்பில் ஊழல் தடுப்பு விசாரணைகளை மேற்கொண்ட ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை, டில்ஹார லொக்குஹெட்டிகே மீது மூன்று வகையான ஊழல் தடுப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், லொக்குஹெட்டிகேவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் கிரிக்கெட் தொடர்பிலான செயற்பாடுகளில் ஈடுபட தற்காலிக  தடை விதிக்கப்பட்டது. தற்போது லொக்குஹெட்டிகேவின் மீது, இரண்டாவது முறையாக ஊழல் தடுப்பு சட்டத் தொகுப்பை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

  • டில்ஹார லொகுஹெட்டிகேவின் மீதான குற்றச்சாட்டுகள் :

சரத்து 2.1.1 – சர்வதேச போட்டி ஒன்றின்போது தரப்பு ஒன்று நிர்ணயிக்க அல்லது திட்டமிட அல்லது போட்டியில் முறையற்ற முடிவு, முன்னேற்றம், நடத்தை அல்லது ஏனைய அம்சங்களில் செல்வாக்கு செலுத்த முயற்சித்தல்.

சரத்து 2.1.4 –  விதிமுறை சரத்து 2.1.1 இனை மீறும் வகையில் வீரர்களை நேரடியாக அணுகல், தூண்டுதல், கவர்தல் அல்லது ஊக்குவித்தல்.

சரத்து 2.4.4 – விதிமுறைகளின் கீழ் ஊழல் நடத்தை தொடர்பில் தன் மீதான அழைப்பு அல்லது அணுகல் பற்றி குறிப்பிட்ட ஊழல் தடுப்பு பிரிவுக்கு முழு விபரத்தை வெளியிட தவறுவது.

இதேவேளை, டில்ஹார லொகுஹெட்டிகே மீது மேற்குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (04) தொடக்கம் எதிர்வரும் 14 நாட்களுக்குள் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்க வேண்டும் எனவும் ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

உலகக் கிண்ண இலங்கை அணி குறித்து தேர்வுக் குழுத் தலைவர் சூசகம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணிக்காக பதினொரு வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும்,

இலங்கை தேசிய அணியில் 2005-2013ம் ஆண்டு காலப்பகுதியில் விளையாடிய டில்ஹார லொக்குஹெட்டிகே, 2 T20I போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதேவேளை, கடந்த சில மாதங்களில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான சனத் ஜயசூரிய மற்றும் நுவான் சொய்சா ஆகியோர் மீது ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்ததுடன், சனத் ஜயசூரியவுக்கு 2 வருடங்கள் கிரிக்கெட் செயற்பாடுகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க