ThePapare இன் பிரபல்யமிக்க பாடசாலை கிரிக்கெட் வீரர் 2022 – வாக்கெடுப்பு ஆரம்பம்

138

இலங்கையின் முதற்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இன் 2022ஆம் ஆண்டுக்கான ThePapare இன் பிரபல்யமிக்க பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதுக்குரிய வாக்கெடுப்பு திங்கட்கிழமை (22) மாலை 4 மணி தொடக்கம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருக்கின்றது.

>> ஆசியக் கிண்ண இலங்கை குழாத்தில் இருந்து வெளியேறும் சமீர

தற்போது ஆரம்பித்திருக்கும் வாக்கெடுப்பு முதற்கட்ட வாக்கெடுப்பாக காணப்படுவதோடு, இது இம்மாதம் 31ஆம் திகதி இரவு 11.59 மணி வரை இடம்பெறும். இந்த முதற்கட்ட வாக்கெடுப்பில் டிவிஷன் – I தொடரில் ஆடும் 36 பாடசாலைகளைச் சேர்ந்த 108 வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

முதற்கட்ட வாக்கெடுப்பில் நீங்கள் உங்கள் வாக்குகளை வழங்க நீங்கள் www.thepapare.com என்கிற எமது இணையதளத்திற்கு செல்ல முடியும். முதற்கட்ட வாக்கெடுப்பினை அடுத்து இரண்டாம் கட்ட SMS வாக்கெடுப்பு ஆரம்பிக்கும்.  இரண்டாம் கட்ட SMS வாக்கெடுப்பு செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி (மாலை 05.59 மணியுடன்) நிறைவுக்கு வரும்.

>> உங்கள் வாக்குகளை இணையதள வாயிலாக வழங்க <<

கடந்த நடைபெற்ற ThePapareஇன் பிரபல்யமிக்க பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதின் SMS வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்ட 36 வீரர்களும் 2,174,779 வாக்குகளை பெற்றிருந்ததோடு, கடந்த ஆண்டின் ThePapare இன் பிரபல்யமிக்க பாடசாலை கிரிக்கெட் வீரராக 1,034,559 வாக்குகளை பெற்ற இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி வீரரும், கொழும்பு றோயல் கல்லூரியின் சகலதுறை வீரருமான சதீஷ ராஜபக்ஷ மகுடம் சூடியிருந்தார்.

கடந்த ஆண்டு இந்த விருது நிகழ்வில் குருநாகல் சென்.ஏன்ஸ் பாடசாலையினைச் சேர்ந்த திரிமால்ஷ சில்வா இரண்டாம் இடத்தினைப் பெற்றதோடு, கொழும்பு இசிபதன கல்லூரியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் தெவிந்து டிக்வெல்ல 275,343 வாக்குகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தினைப் பெற்றிருந்தார்.

ThePapare இன் பிரபல்யமிக்க பாடசாலை கிரிக்கெட் வீரர் – 2022

விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள்

  • ThePapare.com ஊடாக நடைபெறும் முதற்கட்ட வாக்கெடுப்பிற்காக 36 பாடசாலைகளில் இருந்து, 108 கிரிக்கெட் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
  • முதற்கட்ட வாக்கெடுப்பு ஒகஸ்ட் 22 தொடக்கம் 31 வரை இணையவழியே நடைபெறும்.
  • முதற்கட்ட வாக்கெடுப்பில் முதல் 36 இடங்களைப் பெறும் வீரர்கள் இரண்டாம் கட்டத்திற்குச் செல்வர். இரண்டாம் கட்டத்தில் SMS ஊடான வாக்கெடுப்பு இடம்பெறும்.
  • இரண்டாம் கட்ட SMS வாக்கெடுப்பு, செப்டம்பர் 02 தொடக்கம் 16 வரையில் நடைபெறும். (மாலை 05.59 மணி வரை)
  • தெரிவு செய்யப்படும் வீரருக்காக 2022ஆம் ஆண்டின் ThePapare இன் மிகப் பிரபல்யமிக்க பாடசாலை வீரர் விருது செப்டம்பர் 16ஆம் திகதி மாலை 06 மணிக்கு இரண்டாம் கட்ட SMS வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்படும். (முதற்கட்ட வாக்கெடுப்பு கருத்திற்கொள்ளப்படாது)
  • ThePapare.com இன் முடிவே இறுதியானது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<