இலங்கை கிரிக்கெட் சபையின் பூரண நிதி பங்களிப்புடன் தேசிய கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மொனரவில பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானம் நேற்று (30) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன் மூலம் சப்ரகமுவ மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கு இது மிகவும் தேவையான வசதிகளை வழங்குகிறது.
இரத்தினபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் மூலம் இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட சப்ரகமுவ மாகாண கிரிக்கெட் சங்கங்களில் உள்ள வீரர்களுக்கு தமது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். அதேபோல, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் வாய்ப்பு ஏற்படும்.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த...
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் நூர் அலி சத்ரான் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட நூர் அலி சத்ரான் அந்த அணிக்காக இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 117 ஓட்டங்களையும், 51 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1216 ஓட்டங்களையும், 23 T20i போட்டிகளில் ஆடி 597 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தனது முதல்...