தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் நடைபெறவுள்ள வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள...
நேற்று (08) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் 2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோல் கெலன்ட்ஸ் அணி தனது முதல் LPL சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது.
இரண்டாவது அணியாக LPL 2026 இறுதிப் போட்டியில் கோல் கெலன்ட்ஸ்
முன்னதாக ஜப்னா கிங்ஸ் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து கொண்டது. முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த ஜப்னா கிங்ஸ், கோல் கெலன்ட்ஸ் அணியின் சிறந்த பந்துவீச்சு காரணமாக ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்து தவித்த நிலையில் அவர்கள் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றனர்.
ஜப்னா அணியின் துடுப்பாட்டத்தில் கமில் மிஷார அதிகபட்சமாக 32 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் எடுத்தார். கோல் அணியின் பந்துவீச்சில் சரித் அசலன்க மற்றும் எஷான் மாலிங்க ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுக்களையும், தரிந்து ரத்நாயக்க 2 விக்கெட்டுக்களையும் சுருட்டினர்.
பின்னர் சவால் குறைந்த 124 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என களமிறங்கிய கோல் கெலன்ட்ஸ் அணி, ஆரம்பத்தில் ஒரு சரிவை சந்தித்த போதும் 15.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்து போட்டியில் வெற்றி...