அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானிற்குச் சென்று விளையாடாது என பிசிசிஐ இன்று (09) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்க இந்திய அணி அந்த நாட்டுக்கு செல்ல இந்திய அரசு அனுமதி...
2026 ஆம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த இருபதுக்கு-20 (T20) லீக் தொடரின் ஆறாவது பதிப்பு, கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானம், கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் (RPICS), பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானம் (PICS) மற்றும் தம்புள்ளை ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம் (RDICS) ஆகிய நான்கு பிரதான மைதானங்களில் நடைபெறவுள்ளது.
இதனிடையே, வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவுகளை மேற்கொள்வதற்கான இணையத்தளம் (Online portal) 2026 மே 4 ஆம் திகதி திறக்கப்படும்
சர்வதேசத் தரத்திலான இலங்கையின் முதன்மை உள்நாட்டு இருபதுக்கு-20 தொடரான லங்கா பிரீமியர் லீக், கடந்த 2020 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது. இப்போட்டித் தொடரை லங்கா பிரீமியர் லீக்கின் உரிமையாளரான இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அதன் உரிமைதாரரான ஐ.பி.ஜி (IPG Group) நிறுவனத்துடன் இணைந்து நடாத்துகின்றது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சமந்த தொடங்வெல லங்கா பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளராக தொடர்ந்து செயற்படுவார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<