டில்சான் மதுசங்கவிற்கு IPL தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு

1

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவை இந்தப் பருவத்திற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் தமது எஞ்சிய போட்டிகளில் இணைத்திருப்பதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) தெரிவித்துள்ளது.

>>இங்கிலாந்து U19 மகளிர் அணியை சுழலில் வீழ்த்திய இலங்கை

தற்போது நடைபெற்று வருகின்ற IPL தொடரில் SRH அணிக்காக ஆடிவந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரர் பிரைடன் கார்ஸ் வலைப்பயிற்சியில் (Nets) உபாதைக்கு முகம் கொடுத்து தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் அவரின் பிரதியீட்டு வீரராகவே டில்சான் மதுசங்கவிற்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

டில்சான் மதுஷங்க இந்திய நாணயப்படி 75 லட்சம் ரூபாய்களுக்கு (இலங்கை நாணயப்படி 25.4 மில்லியன் ரூபாய்களுக்கு) SRH அணியில் இணைந்துள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது. டில்சான் மதுசங்க இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்வாங்கப்பட்ட போதும் இதுவரை IPL போட்டிகளில் விளையாடியதில்லை.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியானது இந்த IPL பருவத்தில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளதோடு, அடுத்த போட்டியில் ஏப்ரல் 18ஆம் திகதி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<