இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணிக்கு இறுதியில் அபராதம்

53
India vs New Zealand
Blackcaps Twitter

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஒக்லாந்து ஈடின் பார்க் மைதானத்தில் இன்று (8) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்து அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தாமதமாகிய காரணத்தினால் நியூசிலாந்து கிரிக்கெட் அணி மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. 

இருதரப்பு தொடருக்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளைடுகிறது. முதல் தொடரான டி20 சர்வதேச தொடரை இந்திய அணி 5-0 என்ற அடிப்படையில் வரலாற்று சாதனையுடன் கைப்பற்றிய நிலையில் அடுத்த தொடரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் கடந்த புதன்கிழமை (5) ஆரம்பமானது.

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் தொடரையும் வெற்றி கொண்டது. நியூசிலாந்துக்கு

முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றிருந்த நிலையில் இன்று (8) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் நியூசிலாந்து அணி 22 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் ஒருநாள் சர்வதேச தொடரை கைப்பற்றியுள்ளது.  

போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றிபெற்ற விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்படி இந்திய அணியை தொடர்ந்து நியூசிலாந்து அணி இரண்டாவதாக களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன் போது டொம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய விதிமுறையை மீறியதன் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் சர்வதேச போட்டி என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களையும் வீசுவதற்கு ஒரு அணிக்கு குறிப்பிட்டளவு நேரம் வழங்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு வழங்கப்பட்டிருந்த நேரத்திற்குள் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியினரால் 3 ஓவர்கள் குறைவாக வீசப்பட்டிருந்தது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு ஐ.சி.சி அபராதம்

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று (05)

ஐ.சி.சி இனுடைய இலக்கம் 2.22 சரத்தில் குறிப்பிடும் அணித் தலைவர்கள், வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின்படி குறைந்த பந்துவீச்சு பிரதியை பதிவு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நியூசிலாந்து அணியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் நியூசிலாந்து அணி குறித்த மூன்று ஓவர்களையும் வீசுவதற்கு மேலதிக நேரம் எடுத்ததன் காரணமாக போட்டியில் விளையாடிய 11 வீரர்களுக்கும் ஒரு வீரருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 60 சதவீதம் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது. 

இதில் நியூசிலாந்து அணி 48.3 புள்ளி ஓவர்களை மாத்திரமே வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. காரணம் இந்திய அணி அந்த ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. குறித்த குற்றச்சாட்டினை போட்டியின் களநடுவர்களான கிறிஸ் பிரவுண் (நியூசிலாந்து), ப்ரூஸ் ஒக்ஸன்பேர்ட் (அவுஸ்திரேலியா), மூன்றாம் நடுவர் லங்டன் ருசேர் (ஜிம்பாப்வே) மற்றும் நான்காம் நடுவர் ஜோன் டெம்ப்ஸி (நியூசிலாந்து) ஆகியோர் உறுதிப்படுத்த போட்டியின் மத்தியஸ்தரான கிறிஸ் ப்ரோட் (இங்கிலாந்து) மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் போட்டி முடிவடைந்ததன் பின்னர் நியூசிலாந்து அணித்தலைவவர் டொம் லேதம் குறித்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேலதிக விசாரணைகள் எதற்கும் அவர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் ஐ.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது.

11 மாதங்களின் பின்னர் தென்னாபிரிக்க அணியில் இணைந்த டேல் ஸ்டெய்ன்

இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள டி20 சர்வதேச தொடருக்கான தென்னாபிரிக்க அணியின் தலைவராக விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளதுடன்

இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான குறித்த இருதரப்பு தொடரில் குறைந்த பந்துவீச்சு பிரதிக்காக ஐ.சி.சி யினால் அபராதம் விதிக்கப்படும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். டி20 சர்வதேச தொடரில் இந்திய அணிக்கு இரண்டு போட்டிகளிலும், ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்கும், தற்போது இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச தொடரின் மூன்றாவதும் இறுதியுமானதுமான போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) மௌவுண்ட் மௌங்கனியில் நடைபெறவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க