விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு ஐ.சி.சி அபராதம்

68
Image - BCCI

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று (05) ஹமில்டன் செட்டன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தாமதமாகிய காரணத்தினால் அவ்வணி மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது.  

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேசமூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகிய மூவகையா கிரிக்கெட் தொடர்களிலும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் விளையாடிய வண்ணம் உள்ளது. 

ரொஸ் டெய்லரின் அதிரடி சதத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ரொஸ் டெய்லர் மற்றும் டொம் லேதமின் அதிரடியால் நியூசிலாந்து அணி 4…

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டி20 சர்வதேச தொடரை இந்திய அணி 5-0 என்ற அடிப்படையில் வரலாற்று சாதனையுடன் கைப்பற்றிய நிலையில் சுற்றுப்பயணத்தின் அடுத்த தொடரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தயாராகியுள்ளது.  

இன்று (05) ஆரம்பமான இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 347 ஓட்டங்களை குவித்திருந்தாலும்நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களின் அபார துடுப்பாட்டம் மூலம் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.  

குறித்த போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவதாக களத்தடுப்பில் ஈடுபட்டது. ஒரு பக்கம் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. இந்த அழுத்தத்தின் பிரதிபலிப்பு காரணமாக இந்திய அணிக்கு பந்துவீசுவதற்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச முடியாமல் போனது.  

நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான விராட் கோஹ்லி…

ஒருநாள் சர்வதேச போட்டி என்ற அடிப்படையில் 50 ஓவர்களையும் வீசுவதற்கு ஒரு அணிக்கு குறிப்பிட்டளவு நேரம் வழங்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்குள் இன்றைய போட்டியில் இந்திய அணியினால் நான்கு ஓவர்கள் குறைவாக வீசப்பட்டிருந்தது. இதேவேளை இந்திய அணி 48.1 ஓவர்களையே வீசியிருந்தது. காரணம் நியூசிலாந்து அணி குறிப்பிட்ட அந்த ஓவர்களுக்குள் வெற்றியிலக்கை அடைந்தது. இந்த நேரத்திற்குள்ளேயே இந்திய அணி நான்கு ஓவர்களை குறைவாக வீசியிருந்தது.   

இது ஒரு சர்வதேச போட்டி என்ற அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய விதிமுறை இலக்கம் 2.22 சரத்தில் குறிப்பிடும் அணித் தலைவர்கள்வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின்படி இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் இந்திய அணி குறித்த நான்கு ஓவர்களையும் குறைவாக வீசியதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அணித்தலைவர் உள்ளிட்ட போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் ஒரு வீரருக்கு போட்டி ஊதியத்திலிருந்து ஒரு ஓவருக்கு 20 சதவீதம் என்ற அடிப்படையில் நான்கு ஓவர்களுக்கு மொத்தமாக 80 சதவீதம் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.  

ஓய்வின் பின்னர் மீண்டும் அவுஸ்திரேலிய அணியில் இணைந்த க்ளென் மெக்ஸ்வெல்

தென்னாபிரிக்க அணியுடன் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்களுக்குமான அவுஸ்திரேலிய…

குறித்த குற்றச்சாட்டினை போட்டியின் களநடுவர்களான ஷோன் ஹைக் (நியூசிலாந்து)லங்டொன் ருஸேர் (ஜிம்பாப்வே)மூன்றாம் நடுவர் ப்ரூஸ் ஒக்ஸன்பேர்ட் (அவுஸ்திரேலியா) மற்றும் நான்காம் நடுவர் கிறிஸ் பிரவுண் (நியூசிலாந்து) ஆகியோர் உறுதிப்படுத்தபோட்டியின் மத்தியஸ்தரான கிறிஸ் ப்ரோட் (இங்கிலாந்து) மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

போட்டி முடிவடைந்ததன் பின்னர் இந்திய அணித்தலைவவர் விராட் கோஹ்லி குறித்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேலதிக விசாரணைகள் எதற்கும் அவர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் ஐ.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது. இதேவேளை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு குறித்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் குறைந்த பந்துவீச்சு பிரதிக்கா மூன்றாவது முறை அபராதம் விதிக்கப்படும் சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் நடைபெற்ற டி20 சர்வதேச தொடரில் இரண்டு தடவைகள் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (08) ஒக்லாந்தில் நடைபெறவுள்ளது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<