பாகிஸ்தான் கிரிக்கெட் தெரிவுக்குழுவில் இருந்து விலகும் மிஸ்பா உல்-ஹக்

2

பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுவிலிருந்து விலகுவதாக அதன் உறுப்பினர்களில் ஒருவரான மிஸ்பா-உல்-ஹக் அறிவித்துள்ளார்.  

ஜிம்பாப்வே, தென்னாபிரிக்க தொடர்களுக்கான ஆஸி. குழாம் வெளியீடு

தற்போது இங்கிலாந்துக்கு பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து டெஸ்ட் அணி மற்றும் அதன் முகாமைத்துவக் குழுவில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது அதிரடி மாற்றங்களைச் செய்திருந்தது. இந்த விடயங்கள் நடைபெற்று அடுத்த நாளே மிஸ்பா உல்-ஹக் தெரிவுக் குழுவில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். அத்துடன், லாஹூரிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) துடுப்பாட்ட ஆலோசகர் பொறுப்பிலிருந்தும் அவர் விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இங்கிலாந்துபாகிஸ்தான் அணிகள் இடையே லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என பின்தங்கியிருக்கின்றது. இதனையடுத்து, செப்டம்பர் 09ஆம் திகதி எட்ஜ்பாஸ்டனில் இடம்பெறவிருக்கும் மூன்றாவது டெஸ்டுக்கு முன்னதாக, பாகிஸ்தான் அணியிலிருந்து 7 வீரர்களை நீக்கப்பட்டதுடன், தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அஹ்மட் மற்றும் பந்துவீச்சுப்பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரையும் அவர்களது பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர் 

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் காணப்பட்ட மொஹமட் ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அகா, அலி உஸ்மான், ஆமர் ஜமால், உவைஸ் ஜாபர் மற்றும் குர்ரம் ஷாசாத் ஆகிய ஏழு வீரர்களும் விடுவிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக சர்வதேச போட்டிகளில் அறிமுகம் பெறாத அராபத் மின்ஹாஸ், மொஹமட் இம்ரான் ஜூனியர், சாட் பையிக், மொஹமட் இம்ரான் ரந்தவா மற்றும் ரசாஉல்லாஹ் ஆகியோருடன் சைம் அயூப் மற்றும் அப்துல்லா பசால் பாகிஸ்தான் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.   

மேலும் பாகிஸ்தான் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸன் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷ்லே நோப்கே ஆகியோர் டெஸ்ட் அணியின் பயிற்சிப் பொறுப்புகளை ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான அணிகளில் ரிஸ்வான் மற்றும் இமாம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து 24 மணி நேரத்திற்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறு தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வேண்டுகோள் விடுத்திருப்பதாக தெரிகின்றது 

தெரிவுக் குழுவில் இருந்து விலகியிருக்கும் மிஸ்பா உல் ஹக் 2017ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னர் பாகிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளர், தலைமைத் தேர்வாளர் மற்றும் ஆலோசகர் எனப் பல்வேறு பொறுப்புகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் வகித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<