சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து விடைபெற்ற லியோனல் மெஸ்ஸி

International Football

1
International Football
International Football

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனும், அர்ஜென்டின தேசிய அணியின் தலைவருமான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது 21 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணம்  நிறைவுக்கு வந்துள்ளது.

>>டிபெண்டர்ஸ் அணியை இலகுவாக வீழ்த்திய ரெட் ஸ்டார்! ரினௌன் வி.க எதிர் ப்ளூ ஸ்டார் வி.க<<

தனது பிரத்தியேக சமூக வலைதளப் பக்கத்தில் மெஸ்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அணியில் இருந்து விடைபெறுவது மனதுக்கு மிகுந்த வேதனையை அளித்தாலும், இதுவே ஓய்வுக்கு சரியான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

“நீண்ட யோசனைக்குப் பிறகு, நான் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முடிவு எனது ஆன்மாவை மிகவும் காயப்படுத்துகின்றது, ஆனாலும் விடைபெறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை உணர்கிறேன். தேசிய அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன். அடுத்து வரும் தலைமுறைக்கு வழிவிட வேண்டிய நேரம் இது. இனி நான் வெளியில் இருந்து உங்களில் ஒருவனாக அணியை ஆதரிப்பேன்.”

2005ஆம் ஆண்டு அர்ஜென்டின அணிக்காக அறிமுகமான மெஸ்ஸி, இதுவரை மொத்தமாக 207 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடி 125 கோல்களை குவித்து அணியில் அதிக கோல்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.

அவரது தலைமையின் கீழ் அர்ஜென்டின அணியானது 2021 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் கோப்பா அமெரிக்கா (Copa América) கிண்ணங்களையும், 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற FIFA உலகக் கிண்ணத்தினையும் வென்று கால்பந்து உலகின் உச்சத்தை தொட்டது. அதேநேரம் உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு தடவைகள் கோல்டன் பால் (Golden Ball) விருதை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையையும் மெஸ்ஸி தக்கவைத்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், மெஸ்ஸி அமெரிக்காவின் மேஜர் லீக் சோக்கர் (MLS) தொடரில் இன்டர் மியாமி (Inter Miami) கழக அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸியின் ஓய்விற்கு அவரது இரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது நெகிழ்ச்சியான வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<