கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க

2246

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த லசித் மாலிங்க, இலங்கை அணியில் இருந்து தொடர்ச்சியாக புரக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வருடம் க்ளோபல் T20 கனடா லீக் தொடரில் முன்னணி வீரர்களில் ஒருவராக பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித்தும் எதிர்வரும் ஜுன் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க்ளோபல் T20 கனடா லீக் தொடரில் பங்கேற்கவுள்ளதன்மூலம் அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பவுள்ளார்.

மாலிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்த இலங்கை கிரிக்கெட்

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று(02) …

கேப்டவுனில் நடந்த பந்தை சேதப்படுத்திய சம்பவத்தை அடுத்து 12 மாதங்கள் போட்டித் தடை விதிக்கப்பட்ட ஸ்மித்துக்கு, அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் உள்நாட்டு போட்டிகளில் ஆட அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதி அளித்தது.  

இதன்படி அவர் சக நாட்டு வீரரான கிறிஸ் லியோன், அதேபோன்று சர்வதேச நட்சத்திரங்களான கிறிஸ் கெயில், அன்ட்ரூ ரஸ்ஸல், ஷஹிட் அப்ரிடி, டர்ரன் சமி, லசித் மாலிங்க, சுனில் நரைன், டேவிட் மில்லர் மற்றும் ட்வைன் பிராவோ ஆகியோருடன் ஒரு மாதம் நீடிக்கும் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளார்.  

இந்த தொடரில் பங்கேற்பது குறித்து டேவிட் வோர்னரும் சமிக்ஞைகள் காட்டியுள்ளார்

இலங்கை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக செயற்பட்ட லசித் மாலிங்க கடந்த காலங்களில் காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்கு இலங்கை அணியில் இடம்பெறாமல் இருந்தார். எனினும், காயத்தில் இருந்து மீண்ட பின்னர் அவருக்கு அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

இவ்வாறான ஒரு நிலையில், தான் சுமார் ஒரு தசாப்த காலமாக விளையாடி வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இம்முறை ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வாயப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.

முன்னர் மாலிங்கவை தமது அணியில் இருந்து விடுவித்த மும்பை நிர்வாகம், பின்னர் இடம்பெற்ற ஏலத்திலும் அவரை தமது தரப்பிற்கு எடுக்கவில்லை. இவ்வாறான ஒரு நிலையில், அவர் ஐ.பி.எல் தொடரில் விளையாடும் ஏனைய எந்தவொரு அணியினராலும் எடுக்கப்படாமை அதிர்ச்சியளிக்கும் விடயமாக இருந்தது. எனினும், இறுதியில், அவரை தமது பந்து வீச்சு ஆலோசகராக இணைப்பதற்கு மும்பை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இவ்வாறான ஒரு நிலையில், ஐ.பி.எல் தொடர் இடம்பெறும் அதே காலப்பகுதியில் இலங்கை வீரர்களின் திறமையை பரிசோதிப்பதற்காக உள்நாட்டில் சுபர் ப்ரொவின்சியல் தொடர் என்ற பெயரில் மாகாண அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் ஆரம்பமாகியது. குறித்த தொடரில் மாலிங்க விளையாடினால் மாத்திரமே அவரை தேசிய அணிக்கும் மீண்டும் இனைப்பது தொடர்பில் பரிசீலிக்க முடியுமு் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே தற்பொழுது மாலிங்க கனடாவில் இடம்பெறும் க்ளோபல் T20 கனடா கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

க்ளோபல் T20 கனடா தொடர், ஐந்து கடனா நகரங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் ஆறு அணிகளைக் கொண்டு அமையவுள்ளது. இதில் எட்மொன்டன் ரோயல்ஸ், மொன்ட்ரியல் டைகர்ஸ், டொரொன்டோ நஷனல்ஸ், வன்கூவர் நைட்ஸ் மற்றும் வின்னிபேக் ஹவுக்ஸ் என்ற அணிகளுடன் ஆறாவதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் ஒட்டுமொத்தமாக கரீபியன் பிராந்திய வீரர்களைக் கொண்ட அணியும் பங்கேற்கவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையுடனான உத்தியோகபூர்வ கூட்டணியின் ஓர் அங்கமாகவே இந்த அணியும் தொடரில் ஆடவுள்ளது.  

க்ளோபல் T20 கனடா தொடர் வெற்றி அளிக்க மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை சார்பில் நான் வாழ்த்துகிறேன்என்று அந்த கிரிக்கெட் சபையின் தலைவர் டேவ் கெமரூன் குறிப்பிட்டார்.   

இதுபோன்ற லீக் போட்டிகள் மற்றும் தொடர்களிலேயே எமது பிராந்தியத்தின் வளர்ச்சி பெரும்பாலும் தங்கியுள்ளது. நாம் கனடா கிரிக்கெட்டுக்கு ஆதரவை வழங்கி எதிர்காலத்தில் இதனை விடவும் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வாவின் தந்தையும்,…

வரும் மே 31 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஆரம்பக்கட்ட வரைவு ஒன்றின் மூலம் அணிகளுக்கு வீரர்கள் இணைக்கப்படவுள்ளனர். கனடாவின் 23 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் உள்ளடங்கலாக கனடா வீரர்களின் நான்கு பட்டியல்கள் இந்த தொடரில் ஒதுக்கப்பட்டுள்ளன.

22 லீக் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் இறுதிக் கட்டமாக பிளே ஓப்ஸ் (Playoff) மற்றும் சம்பியன் போட்டி ஜூலை 16 ஆம் திகதி நடைபெறும். அனைத்துப் போட்டிகளும் வடக்கு டொரொன்டோவில் உள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கான வசதிகள் கொண்ட மபிள் லீப் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன. இங்கு 7,000 பேருக்கு போட்டிகளை பார்க்கும் வசதி உள்ளது.  

க்ளோபல் T20 கனடா தொடரின்மூலம், இணை அங்கத்துவ நாடு ஒன்றால் லீக் தொடர் ஒன்று நடத்தப்படுவது முதல் முறையாக அமையவுள்ளது. கிரிக்கெட்டின் உலகளாவிய முன்னேற்றத்திற்கு இது ஒரு முக்கிய படியாக உள்ளது என்று கனடா கிரிக்கெட் சபையின் தலைவர் ரஞ்ஜித் சய்னி குறிப்பிட்டார்.

கனடா கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல சர்வதேச வீரர்களையும் நெருக்கமாக பார்ப்பதற்கு சந்தர்ப்பமாக இது அமையவிருப்பதோடு, கனடா கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உதவும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் சமூகத்தினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டேவிட் வோர்னர் மற்றும் கெமரூன் பான்க்ரொப்ட் ஆகியோர் கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவது கடந்த இரண்டு வாரங்களில் உறுதியான நிலையில் ஸ்மித்தின் வருகை எதிர்பார்க்கப்பட்டதை விடவும் விரைவாக இடம்பெறவுள்ளது.  

அவுஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்கள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வழங்கிய தடைகளை நீடித்தபோதும் மேற்கு அவுஸ்திரேலிய மாவட்ட கிரிக்கெட் சங்கம் பான்க்ரொப்ட் ஆட சிறப்பு அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2018-19 பருவத்தில் டேவிட் வோர்னர் சிட்னியின் ரான்ட்விக் பீட்டர்ஷாம் கழகத்திற்காகமுதல் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் அடுவார்என்று அந்த கழகத்தின் தலைவரும் முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருமான மைக் விட்னி தெரிவித்துள்ளார்.  

அவர் வருவதை ஒட்டி அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர். உடைமாற்றும் அறையில் அவர் இருப்பது இளம் வீரர்களுக்கு சிறந்ததாக அமையும்என்றும் அவர் குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்காவுடனான போட்டியில் சர்ச்சைக்குரிய அவரது பங்களிப்புக்காக ஸ்மித்துடன் வோர்னருக்கும் 12 மாத போட்டித் தடை விதிக்கப்பட்டது. எனினும் முன்னாள் அணித்தலைவரான அவருக்கு அவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் ஒருபோதும் தலைவராக செயற்பட முடியாது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…