இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து பிரெண்டன் மெக்கலம் நீக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெஸ்ட் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் T20I அணிகளுக்கான பயிற்றுவிப்பாளராக தொடர்ந்தும் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>T20 பிளாஸ்ட் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பினுர பெர்னாண்டோ<<
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஆஷஷ் தொடரில் 4-1 என இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததையடுத்து பிரெண்டன் மெக்கலம் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் கடைசியாக சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிராக 2-1 என தோல்வியை சந்தித்தை தொடர்ந்து அவர் டெஸ்ட் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிரெண்டன் மெக்கல் 2022ஆம் ஆண்டு நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்ததுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமான ஓட்டங்களை குவிக்கும் (பேஷ்போல்) என்ற யுக்தியை கையாண்டிருந்தார். இந்த யுக்தி ஆரம்பத்தில் இங்கிலாந்து அணிக்கு சிறப்பாக அமைந்திருந்த போதும், அண்மைக்காலங்களில் இதனால் நெருக்கடியை சந்தித்தது.
மொத்தமாக இவருடைய பயிற்றுவிப்பின் கீழ், 27 டெஸ்ட் வெற்றிகள், 20 தோல்விகள் மற்றும் 2 போட்டிகளில் வெற்றித் தோல்வி என்ற பதிவினை இங்கிலாந்து அணி கொண்டுள்ளது. இதில் கடைசி 9 போட்டிகளில் 7 போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்திருந்தது.
இதேநேரம் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக சிம்பாப்வே அணியைச் சேர்ந்த அண்டி பிளவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















