கண்டி ரோயல்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகும் சஹீன் அப்ரிடி

6
LANKA PREMIER LEAGUE

இந்த வாரம் ஆரம்பமாகும் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஷஹீன் அப்ரிடி ஒப்பந்தமாகியிருக்கின்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) 2026ஆம் ஆண்டுக்கான LPL தொடரில் அவர் பங்கேற்பதற்கான தடையில்லா சான்றிதழை (NOC) வழங்கியுள்ள நிலையில், அவர் அதன் மூலம் கண்டி ரோயல்ஸ்  அணிக்காக விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>CSK அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்<<

டெஸ்ட் போட்டிகளில் அப்ரிடியின் செயற்பாடு எதிர்பார்த்த அளவில் காணப்படதாதனை அடுத்து, அவர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

எனினும் 26 வயது நிரம்பிய அவர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கருதப்படுகிறது. எனவே மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் LPL தொடர் ஆகியவை ஒரே நேரத்தில் இடம்பெறும் நிலையில், ஷஹீன் அப்ரிடி LPL தொடரில் ஆட தீர்மானம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஷஹீன் அப்ரிடி இந்த ஆண்டு T20 லீக் தொடர் ஒன்றில் விளையாடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஷஹீன் அப்ரிடி மொத்தமாக 260 T20 போட்டிகளில் 362 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் ஜூலை 17 முதல் ஒகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது. அதேநேரம் ஷஹீன் அப்ரிடியின் கண்டி ரோயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஜூலை 18 தம்புள்ளை சிக்ஸர்ஸை எதிர்கொள்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<